Connect with us

நான் சொல்ற மாதிரி பாடுங்க! –  பிரபல பாடகியை அழ வைத்த இயக்குனர் அமீர்!

News

நான் சொல்ற மாதிரி பாடுங்க! –  பிரபல பாடகியை அழ வைத்த இயக்குனர் அமீர்!

Social Media Bar

தமிழில் குறைவான திரைப்படங்களே இயக்கியிருந்தாலும் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அமீர். அமீர் இயக்கிய திரைப்படங்களில் மிகவும் பிரபலமான திரைப்படம் பருத்திவீரன். அந்த அளவிற்கு இயல்பான ஒரு திரைப்படம் வருவது அப்போது அரிதாக இருந்தது.

நடிகர் கார்த்திக்கு பருத்திவீரன் முதல் படம். முதல் படத்திலேயே அவரும் சிறப்பாக நடித்திருந்தார். போதா குறைக்கு யுவன் சங்கர் ராஜாவின் அசத்தலான இசையும் படத்திற்கு கூடுதல் மெருகேற்றியது. பாடல்கள் அனைத்துமே அந்த படத்தில் ஹிட் அடித்தன.

அதில் வெகுவாக வரவேற்பை பெற்ற பாடல் ஐய்யய்யோ என்கிற பாடல். இந்த பாடலில் பெண் குரலில் பாடுவதற்கு பாடகி ஸ்ரேயா கோஷல் வந்திருந்தார். இந்திய அளவில் பெரும் பாடகியாக பார்க்கப்படுபவர் ஸ்ரேயா கோஷல். தமிழில் இவர் ஒரு சில பாடல்களே பாடியுள்ளார். ஹிந்தியில்தான் அதிக பாடல்கள் பாடியுள்ளார்.

அவர் மிகவும் இனிமையாக அந்த பாடலை பாடினார். ஆனால் அது அமீருக்கு பிடிக்கவில்லை. படத்தின் கதைப்படி கதாநாயகி 8 ஆவது வரை படித்த கிராமத்து பெண். அவளுக்கு இவ்வளவு இனிமையான குரலில் பாடினாள் எப்படி செட் ஆகும். என நினைத்த அமீர் ஸ்ரேயாவிடம் எப்படி பாட வேண்டும் என பாடம் எடுத்துள்ளார்.

உடனே ஸ்ரேயா கோஷல் தன்னை சரியாக பாடவில்லை என அமீர் கூறுகிறார் என நினைத்துக்கொண்டு அழத் துவங்கிவிட்டார். அதன் பிறகு அவரை சமாதானப்படுத்தி கிராமத்து கதாநாயகிக்கு ஏத்த மாதிரி பாடுங்க என கூறி பாடலை வாங்கியுள்ளார் அமீர். அப்படியும் கூட பாடலில் பெண் குரல் மிகவும் இனிமையாகவே இருப்பதை கேட்க முடியும்.

Articles

parle g
madampatty rangaraj
To Top