News
சிவராஜ்குமாரின் மன்னிப்பை ஏத்துக்க முடியாது!.. ஓப்பனாக கூறிய சித்தார்த்!.
தமிழில் ஓரளவு வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சித்தார்த். தற்சமயம் நடித்த சித்தா திரைப்படம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அனைத்து மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
படம் வெளியான முதல் நாள் முதல் இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரிக்க துவங்கியிருந்தது. எனவே இதன் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி கூறும் விதமாக மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் சித்தார்த். அதில் அவர் பேசும் பொழுது அவரிடம் கர்நாடகாவில் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியே அனுப்பியது குறித்து கேள்வி கேட்டார்கள்.
அப்பொழுது அவர் கூறும் பொழுது நாங்கள் அனைத்தையும் சரியாக செய்துதான் அந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்தோம் இருந்தாலும் எங்களை வெளியே அனுப்பி விட்டார்கள். இதற்காக சிவராஜ் குமார், பிரகாஷ்ராஜ் போன்ற முக்கிய பிரபலங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டிருந்தனர்.
அவர்களின் பெருந்தன்மை பாராட்டுக்கூடியது ஆனால் அவர்களுடைய மன்னிப்பை நான் ஏற்றுக் கொள்ள முடியாது ஏனெனில் இதில் அவர்கள் தவறு எதுவுமே கிடையாது எனவே அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கவே தேவையில்லை என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் சித்தார்த்.
