Connect with us

47 வருடத்தை கடந்த தமிழ் சினிமாவின் இமயம் – ரஜினியை வாழ்த்திய செளந்தர்யா ரஜினிகாந்த்

News

47 வருடத்தை கடந்த தமிழ் சினிமாவின் இமயம் – ரஜினியை வாழ்த்திய செளந்தர்யா ரஜினிகாந்த்

Social Media Bar

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவராவார். ரஜினி காந்தை தவிர்த்து யாரும் தமிழ் சினிமா வரலாறை எழுதிவிட முடியாது. ரஜினி தமிழ் சினிமாவில் முதன் முதலாக 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.

அந்த படத்திற்கு பிறகு கவிக்குயில் மாதிரியான பல படங்களில் நடித்த போதும் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது 1978 இல் வெளிவந்த முல்லும் மலரும் திரைப்படம்தான். அதற்கு பிறகு பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த ரஜினிகாந்த் இன்று வரை தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருந்து வருகிறார்.

அபூர்வ ராகங்கள் திரைப்படம் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அதாவது சுதந்திர தினத்தன்று வெளியானது. தற்போதைய குடியரசு தினத்தை கணக்கிட்டால் ரஜினிகாந்த் சினிமா துறைக்கு வந்து 47 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில் ரஜினியின் மகளான செளந்தர்யா ரஜினிகாந்த், ரஜினிகாந்திற்கு  இதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

47 வருடமாக திரையில் மந்திரம் செய்தவர். நிச்சயமாக நீங்கள் கடவுளின் குழந்தை அப்பா என கூறியுள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த்.

Articles

parle g
madampatty rangaraj
To Top