எப்போது வேண்டுமானாலும் அவருடன் படுக்கையறை காட்சியில் நடிப்பேன்.. கூச்சமின்றி கூறிய மாளவிகா..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமாக இருந்த நடிகைகளில் மிக முக்கியமானவர்கள் நடிகை மாளவிகா.

ஆரம்பத்தில் நடிகை மாளவிகாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சுந்தர்சி அவர்தான் அவருக்கு மாளவிகா என்கிற பெயரை வைத்தார்.

மாளவிகாவிற்கு தொடர்ந்து நிறைய படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது அதே சமயம் ஒரு திரைப்படம்தான் அவரை குறித்து அதிகமான சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுதான் திருட்டு பயலே என்கிற திரைப்படம். அதற்கு முன்பு வரை அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த மாளவிகா அந்த திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகள் நடித்திருந்தார்.

மேலும் அந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா இந்த நிலையில் அது அவருக்கு நிறைய கெட்ட பெயரை உண்டாக்கியது. பிறகு பட வாய்ப்புகளும் குறைந்தது.

Social Media Bar

அவரிடம் பேட்டியில் இது குறித்து கேட்ட பொழுது பொதுவாக கதாநாயகி என்று நடித்தால் கூட படத்தில் நான்கு அல்லது ஐந்து காட்சிகளில் வருவதாக இருக்கும். ஆனால் வில்லி கதாபாத்திரமானது படத்தில் முழுவதுமாக வருவதாக இருந்தது.

அதனால்தான் அதை நான் தேர்ந்தெடுத்தேன் என்று கூறியிருக்கிறார் மாளவிகா. மேலும் அவரிடம் படுக்கையறை காட்சிகளில் நடித்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மாளவிகா கூறும் பொழுது பொதுவாக எனக்கு படுக்கை அறை காட்சிகளில் நடிப்பது சிரமமான விஷயம் தான்.

ஆனால் நடிகர் அப்பாஸ் என்னுடைய நல்ல நண்பர் அதனால் அவருடன் நடிப்பது எனக்கு எளிதாக இருந்தது. இன்னும் எத்தனை தடவை அப்பாஸுடன் படுக்கையறை காட்சியில் நடித்த சொன்னாலும் எனக்கு அது எளிதாக தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார் மாளவிகா.