Connect with us

சுத்தி நின்னு பழிவாங்கிட்டாங்க.. ஏமாற்றத்தால் கதறும் டி.டி.எஃப் வாசன்..! பிக்பாஸ்க்காச்சும் போயிருக்கலாம்.!

News

சுத்தி நின்னு பழிவாங்கிட்டாங்க.. ஏமாற்றத்தால் கதறும் டி.டி.எஃப் வாசன்..! பிக்பாஸ்க்காச்சும் போயிருக்கலாம்.!

Social Media Bar

சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு சில பிரபலங்களில் முக்கியமானவர் டிடிஎஃப் வாசன். தொடர்ந்து பைக் சாகசங்கள் போன்றவற்றை செய்து மக்கள் மத்தியில் பரபலமடைந்துள்ளார்.

அதன் மூலமாக நிறைய பிரச்சனைகளையும் அவர் சந்திக்க வேண்டி இருந்தது. பைக் சாகசங்கள் செய்த பொழுது நிறைய சாலை விதிமுறைகளை மீறியதற்காக அவர் மீது வழக்குகள் போடப்பட்டது.

தொடர்ந்து அவற்றை எல்லாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை டிடிஎஃப் வாசனுக்கு ஏற்பட்டது. பொதுவாகவே பைக் ரேசிங் என்று வரும்பொழுது பொதுமக்களுக்கு பிரச்சனை இல்லாமல் அது நடக்க வேண்டும்.

ஆனால் டிடிஎஃப் வாசன் தொடர்ந்து பொதுமக்கள் பயணிக்கும் பொது வழி சாலைகளில் சாகசங்களை செய்து வீடியோக்களை வெளியிட்டார். இதனை அடுத்து அதன் பிரதிபலனாக அவர் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருந்தது.

விரக்தியடைந்த டி.டி.எஃப் வாசன்:

இதற்கு நடுவே மஞ்சள் வீரன் என்கிற திரைப்படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார். இயக்குனர் செல் அம் என்கிற இயக்குனர்தான் இந்த திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் அந்த இயக்குனர் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் டிடிஎஃப் வாசன் நடிக்கவில்லை என்றும் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை அதிக வேலை அவருக்கு இருப்பதால் வேறு கதாநாயகர்களை தேர்ந்தெடுக்க இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த டி.டி.எஃப் வாசன் இது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. என்னிடம் எதுவுமே சொல்லாமல் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கின்றனர். படப்பிடிப்பு அறிவித்த நாள் முதலே எப்போது துவங்குவார்கள் என்று காத்திருந்தேன்.

ஆனால் கடைசிவரை தூங்கவே இல்லை. இப்பொழுது என்னை ஏமாற்றி விட்டனர் என்று கூறியிருக்கிறார் டி.டி.எஃப் வாசன்.

Articles

parle g
madampatty rangaraj
To Top