Connect with us

காசுக்காக ப்ளேட்டை மாத்தி போட்ட ஞானவேல்.. இவரா சமூகநீதி இயக்குனர்.. வேட்டையன் படத்தில் சர்ச்சையான வசனம்..!

vettaiyan rajini

News

காசுக்காக ப்ளேட்டை மாத்தி போட்ட ஞானவேல்.. இவரா சமூகநீதி இயக்குனர்.. வேட்டையன் படத்தில் சர்ச்சையான வசனம்..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் வழக்கமாக சண்டை காட்சிகள் கொண்ட படங்களை இயக்கும் இயக்குனர்கள் நிறைய இருந்தாலும் கூட சில இயக்குனர்கள் தான் அதில் தனித்துவமாக பார்க்கப்படுகிறார்கள்.

முக்கியமாக சமூக நீதி பேசும் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் முக்கியமானவர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கும்பொழுது அவர்களும் கூட இந்த சமூக நீதி விஷயங்களில் இருந்து மாறுபடுவதை பார்க்க முடிகிறது.

அப்படியாக ஜெய் பீம் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் இயக்குனர் தா.சே ஞானவேல். இவர் தற்சமயம் ரஜினியை கதாநாயகனாக வைத்து வேட்டையன் என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

டீசரில் வந்த காட்சி:

vettaiyan rajini

இந்த திரைப்படத்தின் டீசர் ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த டீசரில் போலீஸ்கள் செய்யும் என்கவுண்டரை ஆதரிக்கும் வகையில் ரஜினிக்கு ஒரு வசனம் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு எடுக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படத்தில் காவலர்களின் அத்துமீறல்கள் குறித்து விபரமாக பேசியிருப்பார் ஞானவேல்.

மேலும் காவலர்கள் இப்படியான வன்முறைகளுக்குள் இறங்க கூடாது என்றும் காவலர்களுக்கு எதிராகவும் அந்த படம் பேசியிருக்கும். அப்படி பேசிய ஞானவேல் தற்சமயம் இந்த திரைப்படத்தில் ரஜினிக்காக என்கவுண்டர் காட்சிகளை மிகவும் மாஸாக அமைத்து அதை ஒரு ஹீரோயிக் மொமெண்டாக மாற்றி இருக்கிறார்.

காசுக்காக இப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாமா அப்படி என்றால் வெறும் சண்டை காட்சிகளை கொண்ட படங்களை எடுக்கும் இயக்குனர்களுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம் என்று இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்ப துவங்கி இருக்கின்றனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top