Connect with us

மூணு வருஷத்துக்கு நடிக்கிறதா இல்லை – குழப்பமான கட்டத்தில் இருக்கும் விஜய் சேதுபதி

News

மூணு வருஷத்துக்கு நடிக்கிறதா இல்லை – குழப்பமான கட்டத்தில் இருக்கும் விஜய் சேதுபதி

Social Media Bar

விஜய் சேதுபதி என கூறினால் அவர் ஹீரோவாக நடித்த படங்களை காட்டிலும் வில்லனாக நடித்த படங்களே மக்கள் கண் முன் வந்து செல்கிறது. ஏனெனில் ஹீரோ கதாபாத்திரத்தை விடவும் வில்லன் கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக செய்வதாக கூறப்படுகிறது.

நடிப்பாக இப்போது வெகுவாக பேசப்படும் ஒரு நாயகராக விஜய் சேதுபதி இருக்கிறார். தற்சமயம் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கூட சந்தனம் என்கிற அந்த வில்லன் கதாபாத்திரம் தனியாக பேசப்படும் அளவிற்கு அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.

இதனால் தொடர்ந்து அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் விஜய் சேதுபதி. இப்படியே போனால் இடைவெளியே இல்லாமல் நடிக்க வேண்டிய நிலை அவருக்கு இருக்கிறதாம்.

எனவே யாராவது புது கதையை எடுத்துக்கொண்டு வந்தால் அடுத்த மூன்று வருடத்திற்கு காத்திருக்க தயாரா? என கேட்கிறாராம். ஏனெனில் ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு அவர் படங்களில் கமிட் ஆகி விட்டாராம். அதே சமயம் நல்ல கதைகள் வரும்போது அவற்றை விடவும் மனமில்லாத காரணத்தால் குழப்பமான மனநிலையில் இருக்கிறாராம் விஜய் சேதுபதி.

Articles

parle g
madampatty rangaraj
To Top