படம் ரிலீஸ் பண்றேன்னு அதிகமா அடி வாங்கிட்டு இருக்கேன் – வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் தற்சமயம் நட்சத்திரங்கள் பலரும் திரைப்படம் தயாரித்து வருகின்றனர். படம் தயாரிக்கும்போது திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. ஏனெனில் ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால் அது ஒட்டு மொத்தமாக தயாரிப்பாளர்களை பாதிக்கிறது.

Social Media Bar

நடிகர் விஜய் சேதுபதியும் கூட பல படங்களை தயாரித்து வருகிறார். தற்சமயம் மாமனிதன் திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி “நல்ல கதைகளை பார்க்கும்போது அவற்றை தயாரிக்க ஆவலாக உள்ளது. ஆனால் அப்படியான சில படங்கள் பெரிதான வசூலை தராத போது அது என்னை அதிகமாக பாதிக்கிறது. ஆனால அதே சமயம் அந்த படங்கள் ஓட வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு இருக்கிறது” என கூறியுள்ளார்.

பொதுவாக நடிக்கும் படத்திலேயே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஜய் சேதுபதி என்றாலும், தயாரிப்புக்காக அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அவருக்கு பல சமயங்களில் எதிர்ப்பார்த்த வரவேற்பை அளிப்பதில்லை என சினி வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.