Connect with us

ரஜினிக்கு இருந்த அந்த நல்ல மனசு சூர்யாவிற்கு இல்லை!.. அவமானப்பட்டதால் பிரிந்த இயக்குனர்!.

Cinema History

ரஜினிக்கு இருந்த அந்த நல்ல மனசு சூர்யாவிற்கு இல்லை!.. அவமானப்பட்டதால் பிரிந்த இயக்குனர்!.

cinepettai.com cinepettai.com

Actor Surya and Rajinikanth : சினிமாவில் அஜித் விஜய் சூர்யா போன்ற நடிகர்கள் வந்த ஆரம்ப காலகட்டங்களில் மூவரும் ஒரே மாதிரியான திரைப்படங்களில்தான் நடித்து வந்தனர். அதிகபட்சம் இவர்களது திரைப்படங்கள் காதலை மையப்படுத்தியே இருந்து வந்தன.

பிறகு சினிமாவில் பல மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு பல புது இயக்குனர்கள் வந்த பிறகு மொத்தமாக தமிழ் சினிமாவின் போக்கே மாறியது. அதனைத் தொடர்ந்து நடிகர்களுக்கும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. விஜய்யும் அஜித்தும் ஆக்ஷன் ஹீரோவாக நடிப்பதற்கு அந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து தொடர்ந்து சென்று கொண்டிருந்த பொழுது சூர்யா தொடர்ந்து பிதாமகன் மௌனம் பேசியதே மாதிரியான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க துவங்கினார்.

இந்த நிலையில் சூர்யாவிற்கு மிக முக்கியமான வெற்றி படமாக அமைந்த படம் அயன். அயனுக்குப் பிறகு சூர்யாவை வைத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார் இயக்குனர் கே.வி ஆனந்த் ஆனால் தற்சமயம் சூர்யாவிற்கும் கே.வி ஆனந்திற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறும் பொழுது கே.வி ஆனந்தின் இல்ல திருமணத்திற்கு ஒருமுறை அவர் சிவக்குமாரை அழைத்து இருந்தாராம். அப்பொழுது சிவக்குமார் வேறு படப்பிடிப்பில் இருந்ததனால் வர முடியாது என்று கூறிவிட்டார.

அதனை அடுத்து கார்த்தியோ அல்லது சூர்யாவோ கூட அவர்களின் திருமண விழாவிற்கு வரவில்லை இது கே வி ஆனந்திற்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் திருமணத்திற்கு பிறகும் கூட அவர்களை வந்து சந்திக்கவில்லை சூர்யா குடும்பத்தினர்.

ஆனால் ரஜினிகாந்தை பொறுத்தவரை அவர் பத்திரிகையாளர்களுக்கு கூட மரியாதை கொடுப்பவர் என்று கூறப்படுகிறது. ஒருமுறை பத்திரிகை துறையில் உள்ள எடிட்டர் ஒருவர் அவரது திருமணத்திற்கு ரஜினிக்கு பத்திரிகை அனுப்பி இருந்தார்.

அதனைப் பார்த்து அவருக்கு போன் செய்த ரஜினி அன்று வேறு ஒரு படப்பிடிப்பு இருப்பதால் திருமணத்திற்கு வர முடியாது என்று கூறிவிட்டார். பிறகு திருமணம் நடந்து ஒரு வாரம் கழித்து அந்த எடிட்டருக்கு போன் செய்த ரஜினி தனது வீட்டிற்கு அவர்களை அழைத்து விருந்து வைத்தார் என்று கூறுகிறார் செய்யாறு பாலு.

எனவே அந்த மனநிலை மட்டும் சூர்யாவுக்கு இருந்திருந்தால் தொடர்ந்து கே.வி ஆனந்துடன் சேர்ந்து அவர் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

POPULAR POSTS

virat kohli
taapsee
sathyaraj
itachi uchiha
kamalhaasan indian 2
poonam bajwa
To Top