Cinema History
பேயை நம்புற அளவுக்கு கூட இவனுங்க சாமியை நம்ப மாட்டாய்ங்க!.. பக்தர்களை கலாய்த்த எம்.ஆர் ராதா!..
Tamil Actor MR Radha : தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எம்.ஆர் ராதா. எம்.ஆர் ராதா எம்.ஜி.ஆரை சுட்ட பிறகு அவர் மீது கெட்ட பெயர் உண்டானப்போது கூட சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் மட்டும் கிடைத்துக்கொண்டே இருந்தன.
ஏனெனில் எம்.ஆர் ராதா தனித்துவமான நடிப்பை கொண்டிருந்தார். அப்போது எம்.ஆர் ராதா போன்ற நடிப்பை கொடுக்க மற்றொரு நடிகர் இல்லை என்றே சொல்லலாம். எனவே தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.
எம்.ஆர் ராதா யாரிடமும் குலைந்து பேசக்கூடிய ஆள் கிடையாது. எம்.ஜி ஆரையே தமிழ் சினிமாவில் யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். ஆனால் எம்.ஆர் ராதா மட்டும் எப்போதும் எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைத்து வந்தார். அதே போல பகுத்தறிவு சார்ந்து நிறைய சிந்தனைகளை கொண்டிருந்தார் எம்.ஆர் ராதா அவ்வப்போது அவற்றை மற்றவர்களிடம் அவர் பேசுவதுண்டு.
ஒருமுறை சத்தியராஜிடம் பேசும்போது கேலியான ஒரு விஷயத்தை பற்றி பேசியுள்ளார் எம்.ஆர் ராதா. அவர் கூறும்போது மக்கள் பேயை நம்புகிற அளவிற்கு சாமியை நம்புவதில்லை என்றார். என்ன எம்.ஆர் ராதா இப்படி சொல்கிறாரே என கேட்கும்போது நீங்கள் உங்கள் நண்பர்களிடன் நேற்று நள்ளிரவு படப்பிடிப்பு முடிந்து சாலையில் செல்லும்போது சாலையின் குறுக்கே வெள்ளையாக ஒரு உருவம் கடந்து சென்றது என கூறுங்கள்.
அவர்கள் அதை நம்புவார்கள். ஆனால் அதே நண்பர்களிடம் நேற்று நள்ளிரவு படப்பிடிப்பு முடிந்து செல்லும்போது சாலையில் சாமியை பார்த்தேன் என கூறுங்கள். யாரும் நம்ப மாட்டார்கள். அவர்கள் பேய் இருப்பதை நம்பக்கூட தயாராக இருக்கிறார்கள். ஆனால் சாமி இருப்பதை நம்ப தயாராக இல்லை.