Connect with us

சலார் படத்தில் முதல் பாதியில் தூக்கம் வர இதுதான் காரணம்!.. ரசிகர்கள் அதிருப்தி!..

salaar poster

Latest News

சலார் படத்தில் முதல் பாதியில் தூக்கம் வர இதுதான் காரணம்!.. ரசிகர்கள் அதிருப்தி!..

cinepettai.com cinepettai.com

Salaar Movie : கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வெளியாகியிருக்கும் திரைப்படம் சலார். சலார் திரைப்படம் வெளியானது முதல் நாளே 170 கோடிக்கு ஓடி பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் மொத்தம் 3 பாகங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப் திரைப்படத்தை விடவும் இதில் கதை மாந்தர்கள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாதி அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக பலரும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

என்னவென்று பார்க்கும்போது மூன்று பாகத்திற்கான அறிமுகமாக இந்த முதல் பாதி இருப்பதால்தான் அந்த தொய்வு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக படம் முழுக்க சுருதி ஹாசன் யார் என்றே கூறவில்லை. ஆனால் ஒரு கிராமத்தில் எந்த வித சண்டையும் போடாமல் வாழும் பிரபாஸை ஒரு கூட்டம் தேடி கொண்டிருக்கிறது.

salaar2
salaar2

அதே போல சுருதி ஹாசனையும் அதே கூட்டம் தேடி கொண்டிருக்கிறது. இந்த தேடுதலை வைத்தே முதல் பாதி சென்றுவிட்டது. பெரிதாக கதை எதுவும் நகரவில்லை. இரண்டாம் பாதியில்தான் பிரபாஸ் கன்சார் நகருக்குள்ளேயே செல்கிறார்.

எனவே திரைப்படத்தில் அது ஒரு பெரும் தொய்வாக அமைந்துவிட்டது. மேலும் இந்த படத்தின் ஏன் அந்த கூட்டம் பிரபாஸை தேடி வருகிறது என்றும் தெரியவே இல்லை. பிறகுதான் தெரிகிறது. கன்சாரில் நடக்கும் மீதி விஷயங்களே அடுத்த பாகத்தில்தான் வருகிறது என்று. எனவே நமக்கு முதல் பாதியில் காண்பித்தது அனைத்துமே மூன்றாம் பாகத்தில் வரும் காட்சிகளாகும். இதுதான் இந்த படம் முதல் பாதியின் தொய்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

அநேகமாக மூன்றாவது பாகத்தில்தான் சுருதிஹாசன் யார் என்பதே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Top