Connect with us

படம் எடுக்குறேன்னு எங்க வயித்துல அடிக்காதீங்க!.. சிவகார்த்திகேயன் செயலால் கோபமான சினிமா தொழிலாளர் சங்க ஊழியர்கள்!..

sivakarthikeyan

News

படம் எடுக்குறேன்னு எங்க வயித்துல அடிக்காதீங்க!.. சிவகார்த்திகேயன் செயலால் கோபமான சினிமா தொழிலாளர் சங்க ஊழியர்கள்!..

Sivakarthikeyan: அயலான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தை கமல்ஹாசன் தான் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.

இதற்கு நடுவே தனது 22 ஆவது திரைப்படத்தின் படவேளையிலும் இறங்கிவிட்டார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்குதான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது.

ஏனெனில் பொதுவாகவே ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படங்கள் சமூக அரசியல் பேசும் படமாக இருக்கும். மேலும் அந்த கதாநாயகர்களுக்கு பெரும் ஹிட் கொடுக்கும் படமாக அமைந்துவிடும். எனவே ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் வலம் வருவதற்கு ஒரு முக்கிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sivakarthikeyan
sivakarthikeyan
Social Media Bar

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது. ஆனால் முதல் நாள் படப்பிடிப்பிலேயே பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. இந்த திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிப்பதால் அவர் தெலுங்கில் இருந்தே படத்தில் பணிப்புரிவதற்கு ஆட்களை அழைத்து வந்துவிட்டார்.

இதனால் கோபமான தமிழ் சினிமா தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கோபமடைந்தனர். ஏனெனில் தமிழ்நாட்டில் எடுக்கும் திரைப்படங்களில் பணிப்புரிவதற்கான வாய்ப்புகளை தென்னிந்திய ஊழியர் சங்கத்தை சேர்ந்த தமிழ் ஊழியர்களுக்குதான் தர வேண்டும்.

ஆனால் அதை விட்டுவிட்டு சிவகார்த்திகேயன் இப்படி வெளியில் இருந்து ஆள் அழைத்து வருவது சரி கிடையாது என்பதே அவர்களது கோபமாக உள்ளது.

To Top