இவன் இயக்குனரா? இல்ல பொறுக்கியாடா… பிரபல இயக்குனர் செயலால் கடுப்பான சிவாஜி கணேசன்..

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமாக பார்க்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். ஆனால் அவருக்கே அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் என்றால் அது வேறு யாருமில்லை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்தான்.

கே.எஸ் ரவிக்குமார் படையப்பா படப்பிடிப்பில் செய்த சம்பவத்தால் ஆடிப்போன சிவாஜி கணேசனின் அனுபவம் குறித்து கே.எஸ் ரவிக்குமாரே ஒரு பேட்டியில் பேசியுள்ளார். படையப்பா திரைப்படம் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படமாகும்.

இதில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். நடிகை சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், ராதா ரவி, நாசர் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இதில் நடித்திருந்தனர். மேலும் நடிகர் சிவாஜி கணேசனுக்கு ரஜினியின் அப்பா கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.

sivaji-ganesan
sivaji-ganesan
Social Media Bar

அதில் ஒரு காட்சியில் மாடியில் இருந்து சிவாஜி கணேசன் இறங்கி வர வேண்டும். அப்போது ஊரார் எல்லாம் நடந்து வருவார்கள் என காட்சிகள் இருந்தது. அந்த மாடி ஒரு செட் என்பதால் அவ்வளவு வழுவான கை பிடிகள் எதுவும் இல்லை.

எனவே சிவாஜி கணேசன் ஆபத்து இல்லாமல் நடந்து வரவேண்டுமே என்பதே இதில் பெரும் விஷயமாக இருந்தது. இந்த நிலையில் சிவாஜி கணேசன் நடந்து வந்துக்கொண்டிருக்கும்போதே யாரோ ஃப்ரேமில் வந்துவிட அந்த காட்சி தடைப்பட்டது. இதனால் கடுப்பான கே.எஸ் ரவிக்குமார் அங்கு ஐயர் வேஷம் போட்டு நின்றவர் என பலரையும் அடித்துள்ளார்.

இதனை பார்த்த சிவாஜி கணேசன் படப்பிடிப்பு முடிந்ததும் ரஜினியிடம் சென்று இவன் பிரபலமான இயக்குனர் என கூறினாய். இவன் என்ன பொறுக்கி தனம் செய்கிறான். ஐயரை எல்லாம் போட்டு அடிக்கிறான் என கேட்டுள்ளார். ஐயா அது ஐயர் இல்லை அப்படி வேஷம் போட்டுள்ளனர் என விளக்கியுள்ளார் ரஜினிகாந்த்.