சின்ன வயசுலையே எனக்கு நடந்த அந்த சம்பவம்.. உடைஞ்சு போன வாழ்க்கைதான் என்னோடது.. கதறி அழுத அன்ஷிதா..!

Bigg Boss Tamil Season 8 Anshita Explains Her Childhood Bullies To Bigg Boss Contestants

விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை அன்ஷிதா. அன்ஷிதாவை பொருத்தவரை நன்றாக காமெடி செய்யக்கூடியவர் என்பதால் அவருக்கு தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் கிடைத்தது.

முக்கியமாக குக் வித் கோமாளியில் இவர் அதிக வரவேற்பு பெற்றார். குக் வித் கோமாளி சீசன் 5 வெளியான பொழுது அதில் கோமாளியாக அன்ஷிதாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் மக்கள் விரும்பும் வகையில் அவர் நடித்திருந்தார்.

தொடர்ந்து அவருக்கு வரவேற்பு கிடைக்க துவங்கியது. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஊ சொல்றியா மாமா மாதிரியான நிறைய நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கெடுத்த துவங்கினார். அதன் மூலம் அதிக பிரபலமானதை தொடர்ந்து தற்சமயம் பிக் பாஸ் சீசன் எட்டிலும் முக்கிய போட்டியாளராக இவர் இருந்து வருகிறார்.

anshita
anshita
Social Media Bar

கண்ணீர் விட்டு அழுத அன்ஷிதா:

விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் அதே சமயம் அன்ஷிதா குறித்த சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சீரியல் நடிகர் அர்னவ் மற்றும் அன்ஷிதா அவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருந்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இதற்கு நடுவே தற்சமயம் பிக்பாஸில் பேசிய அன்ஷிதா தனது கடந்த கால வாழ்க்கை குறித்து கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது சிறு வயதிலேயே எனது தாயும் தந்தையும் பிரிந்து விட்டனர்.

அதனால் என்னை ஆசிரமத்தில்தான் படிக்க வைத்தனர் அங்கு நான் தங்கி இருக்கும் பொழுது மற்ற பிள்ளைகளுக்கு தாய் தந்தையிடம் கிடைக்கும் அரவணைப்புகள் எதுவுமே எனக்கு கிடைத்தது கிடையாது எனது வாழ்க்கையே ஒரு உடைந்து போன கண்ணாடி போலதான் எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார் அன்ஷிதா. அந்த வீடியோ இப்பொழுது ட்ரெண்டாக துவங்கியிருக்கிறது.