இத்தனை பேர் இருந்தும் இதை கவனிக்கலை.. விடுதலை 2 வில் வெற்றிமாறன் செய்த பெரிய தவறு..!
மக்கள் போராட்டத்தை கருவாக கொண்டு வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம் விடுதலை. விடுதலை திரைப்படத்தில் வாத்தியார் என்கிற புரட்சியாளரும் அவரை காப்பாற்றும் கிராம மக்களும் என கதை செல்கிறது. இந்த நிலையில் வாத்தியாரை பிடிக்க அங்கு வந்திருக்கும் காவலர்கள் தொடர்ந்து கிராம மக்களிடம் அதிகார மீறல்களில் ஈடுபடுகின்றனர்.
கிட்டத்தட்ட வீரப்பனை பிடிக்க சென்ற காவலர் குழு செய்த விஷயங்களை அப்படியே பதிவு செய்திருந்தார் வெற்றிமாறன். வீரப்பனை பிடிப்பதற்காக மக்களை விசாரிக்க அங்கு வைக்கப்பட்டிருந்தது போலவே வதை முகாம்கள் விடுதலை படத்திலும் காட்டப்பட்டிருக்கும்.
படத்தில் உள்ள தவறு:

ஆனாலும் ஆரம்பத்திலேயே கதை கற்பனை கதை என கூறிவிட்டார் வெற்றிமாறன். இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. இரண்டாம் பாகத்தில் மக்கள் ஒரு தவறை கண்டறிந்துள்ளனர்.
அதாவது விடுதலை திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் முதல் பாகத்தில் போலீஸாக நடித்திருந்தார். கௌதம் மேனன் அணியில் அவரும் இருப்பார். ஆனால் இந்த பாகத்தில் அவர் பண்ணையாராக நடித்திருக்கிறார்.
அது எப்படி ஒரே கதாபாத்திரம் போலீசாகவும் பண்ணையாராகவும் படத்தில் வருகிறது என்கிற கேள்வி ரசிகர்களுக்கு எழுகிறது. இவ்வளவு உதவி இயக்குனர்கள் இருந்தும் இதை கூடவா கவனிக்கவில்லை என்கின்றனர் பொது மக்கள்.