Ghost Girl: குஜராத்தில் ஆவியால் வெளிவந்த ஒரு குற்றம் தற்சமயம் அதிக பேசுபொருளாகி உள்ளது. காதலியை கொலை செய்து 34 வருடங்களுக்கு பிறகு பெண்ணின் ஆவி பழிவாங்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
குஜராத்தை சேர்ந்த சம்சுதின் என்பவர்தான் இதில் முக்கிய குற்றவாளியாக அறியப்படுகிறது. சம்சுதினுக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் உள்ளனர். 1992 இல் இவர் திருமணத்திற்கு பிறகும் கூட ஃபர்சானா என்கிற ஒரு பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளார்.
ஆரம்பத்தில் இருவரும் நல்லப்படியாகதான் உறவில் இருந்துள்ளனர். ஆனால் போக போக ஃபர்சானா சம்சுதினின் சொத்தில் தனக்கு பங்கு வேண்டும் என கேட்க துவங்கியுள்ளார். இந்த பிரச்சனை பெரிதானதால் ஒரு கட்டத்தில் ஃபர்சானாவை சம்சுதினும் அவரது தம்பியும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். பிறகு அவரது உடலை அவர்கள் வீட்டு செப்டிங் டேங்க் அடியிலேயே புதைத்தும் விட்டனர்.

துவங்கிய பிரச்சனை:
கொலை நடந்து 34 வருடங்களில் ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சில மாதங்களுக்கு பிறகு சம்சுதின் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். அதற்கு பிறகுதான் பிரச்சனை துவங்கியுள்ளது. ஆவியாக இருக்கும் ஃபர்சானா அதற்கு பிறகு சம்சுதின் மற்றும் அவரது தம்பி குடும்பத்தை தொடர்ந்து பயமுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆவியின் உருவத்தை வைத்து அது ஃபர்சானாதான் என உறுதிப்படுத்தியுள்ளார் சம்சுதினின் தம்பி. இந்த நிலையில் வீடு மாறிய பிறகும் கூட இவர்களுக்கு இந்த ஆவி தொல்லை ஓயவில்லையாம். இதனால் தொடர்ந்து மாந்திரீகர்களை அழைத்த வண்ணம் இருந்துள்ளனர்.
இதனை அடுத்து இந்த விஷயம் வெளியில் தெரிய துவங்கவே அகமதாபாத் காவலர்கள் விஷயத்தை அறிந்து வந்து தோண்டி பார்த்தப்போது உண்மையாகவே எலும்புக்கூடு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து விசாரனை செய்ய துவங்கியுள்ளனர் போலீசார்.









