Cinema History
முதல் நாளே அவமானத்தைதான் சந்தித்தார் எஸ்.ஜே சூர்யா!.. எல்லாம் நம்ம அஜித்தான்..
தமிழ் சினிமாவில் அஜித் விஜய்யை மட்டும் வைத்து படம் இயக்கிய ஒரே இயக்குனர் எஸ்.ஜே சூர்யா என கூறலாம். தனது முதல் படமே அஜித்தை வைத்து இயக்கினார் எஸ்.ஜே சூர்யா.
ஆனால் அதற்கு முன்னர் இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அந்த சமயத்தில்தான் வசந்த் ஆசை என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில் அஜித்தான் கதாநாயகனாக நடித்தார். எனவே அந்த வழியில் எஸ்.ஜே சூர்யாவிற்கும், அஜித்திற்க்கும் இடையே நல்ல பழக்கம் இருந்தது.
அப்போதே வாலி படத்தின் கதையை எழுதி வைத்திருந்தார் எஸ்.ஜே சூர்யா. அந்த கதை அஜித்திற்கு பிடிக்கவே அவரே இந்த கதையில் நடிக்கிறேன் என்றார். இந்த நிலையில் வாலி படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பின்போது எஸ்.ஜே சூர்யா கேமிரா ஆங்கிள்களே சரியாக வைக்கவில்லையாம்.
இதை பார்த்த அஜித் கேமிராவையே ஒழுங்காக பிடிக்க தெரியவில்லை இவர் எப்படி படம் எடுக்க போகிறார் என கூறியுள்ளார். இதை கேட்ட எஸ்.ஜே சூர்யா அன்றே வீட்டிற்கு சென்று நிறைய ஹாலிவுட் படங்களை வாங்கி கேமிரா ஆங்கிள் அவற்றில் எப்படி உள்ளன என பார்த்துள்ளார்.
அப்படியெல்லாம் பார்த்து அவர் எடுத்த வாலி திரைப்படம் பெறும் ஹிட் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.