Connect with us

சரியில்லையே உங்க படப்பிடிப்பு!.. செல்வராகவன் செயலால் கடுப்பான நடிகர் இளவரசு..

Cinema History

சரியில்லையே உங்க படப்பிடிப்பு!.. செல்வராகவன் செயலால் கடுப்பான நடிகர் இளவரசு..

சரியில்லையே உங்க படப்பிடிப்பு!.. செல்வராகவன் செயலால் கடுப்பான நடிகர் இளவரசு..

cinepettai.com cinepettai.com

தமிழில் புதுப்பேட்டை திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் இயக்குனர் செல்வராகவன். புதுப்பேட்டைக்கு முன்பு நிறைய படங்கள் எடுத்திருந்தாலும் கூட அவருக்கு ஒரு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படமாக புதுப்பேட்டைதான் இருந்தது.

2006 ஆம் ஆண்டு வெளிவந்த புதுப்பேட்டை தனுஷ் செல்வராகவன் இருவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியானபோது அப்போது பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் அதன் பிறகு அது அதிக வரவேற்பை பெற்றது.

அதற்கு பிறகு தமிழில் பெரும் நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கினார் செல்வராகவன். இப்படியாக செல்வராகவன் நடிகர் சூர்யாவை வைத்து எடுத்த திரைப்படம் தான் என்.ஜி.கே. இந்த திரைப்படத்தில் நடிகர் இளவரசு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

படத்தின் படப்பிடிப்பு நடிக்கும் பொழுது நடக்கும் பொழுது இளவரசுவை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டன. சில காட்சிகளை ஒரே முறை எடுத்துவிட்டு சென்றுவிட்டார் செல்வராகவன். பொதுவாக ஒரு காட்சியை பல கோணங்களில் வைத்து இயக்குனர்கள் எடுப்பார்கள்.

ஆனால் அப்படி எடுக்காமல் நிறைய காட்சிகளை ஒரே கோணத்தில் எடுத்துவிட்டு சென்றார் செல்வராகவன். அப்போது பொறுமை தாங்காத இளவரசு கோபமாகி ஒரு முறை எதற்கு சார் இப்படி எடுக்கிறீர்கள் மூன்று நான்கு கோணங்களில் காட்சிகளை எடுப்பதில்லையா? என்று சத்தம் போட்டு விட்டார்.

செல்வராகவன் அதற்கு பதில் அளிக்கும் போது இல்லை சார் எனக்கு அத்தனை கோணங்களில் அந்த காட்சி தேவை இல்லை ஒரு கோணத்திலேயே ஒரு காட்சி எனக்கு போதுமானதாக இருக்கிறதா? இல்லையா என்று தெரிந்துவிடும் அதற்கு மேல் நான் எடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அப்பொழுதுதான் செல்வராகவனிடம் புதிதாக ஒன்றை கற்றுக் கொண்டேன் என்று இளவரசு தனது பேட்டியில் கூறியுள்ளார்.

POPULAR POSTS

virat kohli
taapsee
sathyaraj
itachi uchiha
kamalhaasan indian 2
poonam bajwa
To Top