Connect with us

ஏன்யா உன் ஊர்ல நல்லவனே கிடையாதா?.. சசிக்குமார் படத்தில் சண்டை போட்ட நடிகர்!.

sasikumar aadukalam naren

Cinema History

ஏன்யா உன் ஊர்ல நல்லவனே கிடையாதா?.. சசிக்குமார் படத்தில் சண்டை போட்ட நடிகர்!.

Social Media Bar

ஆடுகளம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஆடுகளம் நரேன். சிறு வயதில் இருந்தே தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்ததால் தொடர்ந்து சினிமாவில் முயற்சி செய்து வந்தார்.

ஆனால் மிக தாமதமாக இயக்குனர் வெற்றிமாறன் மூலமாகதான் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு ஏராளமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் முக்கியமாக கதாநாயகனின் தந்தையாக பல படங்களில் நடித்துள்ளார் ஆடுகளம் நரேன்.

அப்படியாக சசிக்குமார் நடித்த சுந்தரப்பாண்டியன் திரைப்படத்திலும் கதாநாயகனின் தந்தையாக நடித்திருப்பார். இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரனின் முதல் படமாக சுந்தரப்பாண்டியன் இருந்தது. அவர் ஆடுகளம் நரேனிடம் பேசும்போதே ஒரு பெரிய நடிகரிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கேட்டோம்.

அவர் ஒப்புக்கொள்ளாததால்தான் உங்களிடம் வந்தோம் என கூறியுள்ளார். இதை கேட்டு கடுப்பான ஆடுகளம் நரேன் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதற்கு பிறகு அவரை சமாதானப்படுத்திதான் அந்த  திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

முதல் காட்சியே பெண் வீட்டுக்கு போய் பெண் கேட்கும் காட்சிதான் படமாக்கப்பட்டது. அந்த காட்சியை படித்த ஆடுகளம் நரேன் ஏன்யா அந்தாளு அவர் ஊர்ல பெரிய ஆளு. அவர்கிட்ட போய் நீ பொண்ண கொடுக்கலைனா பொண்ண தூக்கிடுவேன்னு சொன்னா அவங்க ஈகோவை டச் பண்ற மாதிரி இருக்காதா என கேட்டுள்ளார் நரேன்.

அதற்கு பதிலளித்த இயக்குனர் இல்ல சார் எங்கூர்ல அப்படிதான் பேசுவாங்க என கூற ஏன்யா உன் ஊர்ல நல்லவங்களே கிடையாதா என வம்பு செய்துள்ளார் ஆடுகளம் நரேன். இந்த தகவலை ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்திருந்தார்.

To Top