Tamil Cinema News
மேடையில் சென்று தல அஜித் கொடுத்த டாக்.. ஆடிப்போன கலைஞர் கருணாநிதி.. அதுதான் அஜித் வெளியில் வராமல் போனதுக்கு காரணம்.!
நடிகர் அஜித் இப்போதெல்லாம் எந்த ஒரு பத்திரிகை மீட்டிங்கிலும் கலந்து கொள்வது கிடையாது. இசை வெளியீட்டு விழாவிற்கு வருவது கிடையாது எந்த ஒரு சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பேட்டி கொடுப்பது கிடையாது.
இதனால் அஜித்தை பலரும் பலவாறு விமர்சித்து வாழ்ந்தாலும் கூட நடிகர் அஜித்துக்கான வரவேற்பு என்பது குறையவே இல்லை. தொடர்ந்து அஜித்துக்கான ரசிகர்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இத்தனைக்கும் விஜய் மாதிரி வருடத்திற்கு ஒரு திரைப்படம் கூட அஜித் கொடுப்பது கிடையாது. இரண்டு வருடத்திற்கு ஒரு திரைப்படம் என்கிற ரீதியில் தான் இப்பொழுது அவருடைய படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அஜித் கொடுத்த ஸ்பீச்:
ஆனால் ஒரு காலகட்டத்தில் மேடையில் அஜித் ஏறினாலே சர்ச்சையாக பேசுவார் என்று அஜித் குறித்து ஒரு ஒரு வாதம் இருந்து வந்தது. அதற்கு தகுந்தார் போல முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை வாழ்த்துவதற்கு ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர் அந்த சமயத்தில் அஜித் அதில் கலந்து கொண்டிருப்பார். அப்பொழுது மேடையில் ஏறி அஜித் பேசும்பொழுது சினிமா நடிகர்கள் வர விருப்பம் இருந்தால் வரவிடுங்கள்.
அவர்களை மிரட்டி எல்லாம் நிகழ்ச்சிக்கு அழைக்காதீர்கள் என நேரடியாக கேட்டிருந்தார் அதனை கேட்டு அப்பொழுது அங்கு அமர்ந்திருந்த கருணாநிதியே வியந்து போனார் இந்த மாதிரியான நெத்தியடி பேச்சுகளால் தான் அஜித் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார். அதனால்தான் பிறகு அவர் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் நிறுத்திக் கொண்டார்.
