Connect with us

மேடையிலேயே அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட மாதவன்… ஆடிப்போன நடிகை.. இது வேறயா?.

madhavan and kavya madhavan

News

மேடையிலேயே அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட மாதவன்… ஆடிப்போன நடிகை.. இது வேறயா?.

Social Media Bar

இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் மாதவன் மாதவனை பொருத்தவரை அவருக்கு முதல் திரைப்படமே வெற்றி படமாக அமைந்தது. அலைபாயுதே 100 நாட்களை தாண்டி ஹிட் கொடுத்த ஒரு திரைப்படமாகும்.

இப்பொழுது வரைக்கும் வெகுவாக பேசப்படும் திரைப்படமாக அது இருக்கிறது அதற்கு பிறகு மூன்றாவதாக அவர் நடித்த மின்னலே திரைப்படம் தமிழில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படமாகும். மாதவனைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து சினிமாவில் மார்க்கெட் பெற்று வரும் ஒரு நடிகர் என்றுதான் கூற வேண்டும்.

இப்பொழுதும் மாதவன் ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் அதை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் அவர் நடித்த ராக்கெட்ரி என்கிற திரைப்படம் அதிக வரவேற்பு பெற்று இருந்தது. இந்திய விஞ்ஞானியான நம்பி நாராயணன் என்பவரின் சொல்லப்படாத வாழ்க்கையை திரைப்படம் ஆக்கினார் மாதவன்.

தொடர்ந்து வரவேற்பு:

அதை அவரே இயக்கியிருந்தார். அதற்கு முன்பு மாதம் நடித்த விக்ரம் வேதா இறுதிச்சுற்று மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே தமிழில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் ஆகும். வயதான தோற்றத்தில் நடித்தாலும் கூட இப்பொழுது மாதவனின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு அப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறது.

அவரும் வழக்கமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காமல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் மாதவன் செய்த விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.

கேரளாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் காவியா மாதவன் இவர் கேரளாவில் நிறைய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார் வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு திரைப்படங்களில் நடிக்கக் கூடியவர் என்று கூறலாம்.

நடிகை சொன்ன விஷயம்:

இவர் நடித்த 5 சுந்தரிகள் மாதிரியான சில திரைப்படங்கள் கேரளாவில் அதிகமாக பிரபலமான படங்களாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு விருது வழங்கும் விழாவில் மாதவன் அவருக்கு விருது வழங்கினார் அப்பொழுது மாதவனிடம் பேசிய காவியா மாதவன் தமிழ்நாடு மக்கள் ஒரு முறை எனக்கு மிகுந்த மரியாதை கொடுத்து எனக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்தனர்.

ஏன் என்னை பார்க்க இவ்வளவு பேர் வருகிறார்கள் என்று எனக்கு சந்தேகமாக இருந்தது ஏனெனில் நான் தமிழ் படங்களில் நடித்ததே கிடையாது. அதற்கு பிறகு தான் தெரிந்தது காவ்யா மாதவன் என நான் பெயர் வைத்திருப்பதால் என்னை மாதவனின் மனைவி என்று அனைவரும் நினைத்து விட்டனர் என்று கூறியிருந்தார் காவியா மாதவன்.

அதற்கு பதில் அளித்த மாதவன் அதனால் ஒன்றும் பரவாயில்லை நான் என்னுடைய முதல் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது எனக்கு இருந்த முதல் வசனமே அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளலாம் என்பதுதான் என்று கூறியிருந்தார். அட்ஜஸ்ட் என்று கூறியவுடன் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த நடிகை பிறகு சாதாரண நிலைக்கு வந்ததை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top