Connect with us

அன்னைக்கு நான் தேர்ந்தெடுத்த தவறான பாதை.. இன்னமும் அங்கேயே நிக்கிறேன்.. ராஜமௌலியிடம் மனம் வருந்திய சூர்யா.!

surya rajamouli

Tamil Cinema News

அன்னைக்கு நான் தேர்ந்தெடுத்த தவறான பாதை.. இன்னமும் அங்கேயே நிக்கிறேன்.. ராஜமௌலியிடம் மனம் வருந்திய சூர்யா.!

Social Media Bar

ஒரு காலகட்டத்தில் நடிகர் அஜித் விஜய்க்கு போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் சூர்யா. ஆனால் போகப் போக 2000 களுக்கு பிறகு சூர்யா தேர்ந்தெடுத்த நிறைய கதைகள் அவருக்கு தோல்வியை பெற்றுக் கொடுத்தன.

அந்த சமயங்களில் தொடர்ந்து ஆக்ஷன் கதைகளாக தேர்ந்தெடுத்து அஜித் மற்றும் விஜய் இருவரும் சினிமாவில் முக்கிய நடிகர்களாக மாறினார்கள். இப்பொழுது அஜித் விஜய் இடத்தை சூர்யா தொட முடியாத அளவிற்கு அவர்கள் இருவரும் பெரிய நடிகர்களாக மாறிவிட்டனர்.

இந்த நிலையில் நிறைய நல்ல படங்களில் வாய்ப்புகள் வந்தும் அவற்றை தவறவிட்டிருந்தார் சூர்யா. சமீபத்தில் கங்குவா திரைப்படத்திற்காக அவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது அங்கு ராஜமௌலியும் வந்திருந்தார்.

surya kanguva

surya kanguva

ராஜமௌலி கொடுத்த வாய்ப்பு:

அப்பொழுது ராஜமௌலியிடம் பேசிய சூர்யா அவருடைய திரைப்படம்  தவறவிட்டது குறித்து பேசி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ராஜமௌலி காட்டிய பாதையை அன்று தவறவிட்டதன் காரணமாக இன்னமும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

அதாவது ராஜமௌலி பெரும் இயக்குனர்களாக மாறுவதற்கு முன்பு அவர் இயக்கிய திரைப்படம் மகதீரா. இந்த திரைப்படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்தார். ஆனால் முதலில் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தது நடிகர் சூர்யாதான்.

ஆனால் அந்த கதையை கேட்டுவிட்டு சூர்யா நடிப்பதற்கும் மறுத்துவிட்டார் அந்த சமயத்தில்தான் சூர்யா ரத்த சரித்திரம் என்கிற மற்றொரு திரைப்படத்தில் நடித்தார். ஆனால் ரத்த சரித்திரம் பெரும் தோல்வியை பெற்று கொடுத்தது. மகதீரா திரைப்படம் தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த விஷயத்தைதான் போட்டியில் பகிர்ந்து இருந்தார் சூர்யா.

Articles

parle g
madampatty rangaraj
To Top