Connect with us

வடக்கன்ஸ்னாலும் அவங்களும் மனுஷங்கதான்! – சக மனிதர்கள் குறித்து பேசிய விஜய் ஆண்டனி!

vijay-antony

News

வடக்கன்ஸ்னாலும் அவங்களும் மனுஷங்கதான்! – சக மனிதர்கள் குறித்து பேசிய விஜய் ஆண்டனி!

Social Media Bar

தமிழில் வித்தியாசமான திரைப்படங்களில் நடிக்க கூடியவர் என பெயர் பெற்றவர் நடிகர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி திரைப்படம் என்றாலே அந்த படத்திற்கு என்று மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பதுண்டு.

தற்சமயம் இவர் நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரவிருக்கிறது. அந்த படத்தின் ஸ்னீக் பீக்கே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மூளையை ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு மாற்றுவதன் மூலம் மனிதனால் சாவே அற்ற வாழ்வை வாழ முடியும் என்கிற தியரி அறிவியலில் உண்டு.

அதை அடிப்படையாக கொண்டு பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அடிக்கடி சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஜய் ஆண்டனி பதிவிடுவது உண்டு.

தற்சமயம் வட இந்தியர்கள் குறித்து அவர் பேசியுள்ளார். வட மாநில இந்தியர்கள் தமிழ்நாட்டில் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுகிறது என ஒரு பேச்சு உண்டு.

இதை எதிர்க்கும் விதமாக பேசிய விஜய் ஆண்டனி வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்…   நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர். என பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து இந்த பதிவிற்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.

To Top