News
மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றி… கனத்த இதயத்துடன் தளபதி விஜய்! என்ன நடந்தது?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது ஒரு அரசியல் கட்சி தலைவராக உருவெடுத்துள்ளார் தளபதி விஜய். இதனால் இனிமேல் நடிப்பை குறைத்து முழு நேரமும் அரசியல் களத்தில் குதிப்பதாகவும் அறிவித்திருந்தார். அது போலவே தனது அரசியல் பணிகளை ஆர்வமாக கூடவே மும்முரமாகவும் செய்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 6 கொடூர குற்றவாளிகள் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து சாக்கு மூட்டையில் பிணத்தை வைத்து சாக்கடையில் எறிந்துள்ளனர்.
தற்போது சிறுமியின் பிணம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், காவல் துறையும் தீவிர நடவடிக்கை எடுத்துக் கொண்டு தான் வருகிறது. இதற்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் தனது கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சிறுமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அதற்கு கண்டனமும் தெரிவித்து தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்கு கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த கொலையாளிகளுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதனாகவும், கூடவே அரசியல் கட்சி தலைவராகவும் விஜய் தனது வேலையில் சரியாக இருப்பதாக ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
