Tamil Cinema News
முதலில் அவரை பத்திர்க்கையாளர்களை சந்திக்க சொல்லுங்க.. விஜய்க்கு பதிலடி கொடுத்த நடிகர் விஷால்..!
நடிகர் விஜய்க்கு முன்பு இருந்தே அரசியலின் மீது அதிக ஈடுபாடு கொண்டவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார்.
நடிகர் விஜய் கட்சி துவங்கிய பொழுது விஷாலும் கட்சியை துவங்கி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஷால் அரசியலுக்கு வருவதாக கூறிக் கொண்டிருக்கிறாரே தவிர இப்பொழுது வரை அரசியலுக்கு வரவில்லை.
ஆனாலும் கூட அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுப்பதை தொடர்ந்து விஷால் செய்து வருகிறார். ஒவ்வொரு முறை சென்னையில் பேரிடர் ஏற்படும் பொழுதும் கொரோனா போன்ற காலகட்டத்தின் பொழுதும் தொடர்ந்து தனது குரலை பதிவு செய்து வந்திருக்கிறார் நடிகர் விஷால்.
இதனால் அரசியல் சார்ந்த கேள்விகளையும் பத்திரிகையாளர்கள் அடிக்கடி விஷாலிடம் கேட்பது உண்டு. இந்த நிலையில் நடிகர் விஜய் எப்போதுமே ஆளுங்கட்சிகளையும் மத்திய அரசையும் நேரடியாக பேசுவதே கிடையாது என்று இது குறித்து விஷாலிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த விஷால் இதுவரை விஜய் பத்திரிக்கையாளர் சந்திப்பு என்று ஒன்று வைக்கவே இல்லை. முதலில் பத்திரிகையாளர் சந்திப்பு வைக்க சொல்லுங்கள். பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் இந்த கேள்விகளை எல்லாம் கேளுங்கள்.
இதை என்னிடம் கேட்டால் என்ன அர்த்தம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் விஷால். இந்த நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது சரியா? என்று விஷாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஷால் சமூக ஈடுபாடு கொண்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அதில் தவறு இல்லை என்று கூறியிருக்கிறார்.
