Connect with us

உறுப்பு இருந்துட்டா நீ ஆம்பளையா.. அறுத்து எறிஞ்சுடுவேன்.. கடுப்பான நடிகை கஸ்தூரி!.

kasthuri

Latest News

உறுப்பு இருந்துட்டா நீ ஆம்பளையா.. அறுத்து எறிஞ்சுடுவேன்.. கடுப்பான நடிகை கஸ்தூரி!.

நாட்டில் பெண்களுக்கு எதிரான பல வன்முறைகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் சமீபத்தில் நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் என்றால் அது கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை தான்.

இந்நிலையில் பயிற்சி மருத்துவராக கொல்கத்தாவில் ஆர்.ஜீ.கர் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த பயிற்சி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நாட்டை உலுக்கியது.

இந்த சம்பவம் குறித்து தற்போது நாட்டில் பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்கள், நடிகர்கள் என பலரும் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். தற்போது நடிகை கஸ்தூரி அவரின் ஆவேசத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நாட்டை உலுக்கிய சம்பவம்

கொல்கத்தாவில் கடந்த வாரம் அதிகாலையில் 31 வயதான பயிற்சி மருத்துவரான பெண் அந்த மருத்துவமனையில் கொடூரமாக பாலில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை கைது செய்து இருக்கும் நிலையில், இந்த சம்பவத்தில் அந்த ஒரு நபர் மட்டும் இல்லாமல் மேலும் பலர் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இறந்த அந்தப் பெண்ணின் உடலில் இருந்து 150 கிராம் ஆணின் விந்தணுக்கள் எடுக்கப்பட்டு இருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

kolkata doctor

இந்நிலையில் 36 மணி நேரம் ஓய்வில்லாமல் பயிற்சி மேற்கொண்ட அந்த மருத்துவர் இவ்வாறாக கொலை செய்யப்பட்டு இருப்பது, பல மருத்துவர்களின் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் எலும்புகள் உடைக்கப்பட்டு, கண்களில் இருந்து ரத்தம் வலிய, மேலும் உடலில் பல இடங்களில் கடிக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் அந்த பெண் மருத்துவர் இறந்திருக்கிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடையது யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி கூறிய கருத்தை பார்க்கலாம்.

நடிகை கஸ்தூரியின் ஆவேசம்

இந்த சம்பவம் கேள்விப்பட்ட அன்றிலிருந்து எனக்கு கோபமாகவும், பயமாகவும் இருக்கிறது. இவ்வாறு ஒரு பெண்ணை கொடுமைப்படுத்தி ஒருவன் கொலை செய்திருக்கிறான் என்றால் இந்த சம்பவத்தில் அந்த ஒரு நபர் மட்டும் இருக்கமாட்டான். மேலும் பலருக்கும் அதில் தொடர்பு இருக்கும்.

அந்த மருத்துவமனைக்கு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பணம் வருகிறது. மேலும் அது முறைகேடாக வருவதை அந்த பயிற்சிப்பெண் மருத்துவர் கண்டுபிடித்து இருக்கலாம். இதனால் தான் அந்தப் பெண் பல நாட்கள் திட்டமிட்டு சதியால் கொல்லப்பட்டு இருப்பார் என்ற சந்தேகம் எழுகிறது.

kasthuri

தமிழ்நாட்டிலும் பல பெண்களுக்கு இதே போன்ற நிலைமை இருக்கிறது. ஒரு டாக்டருக்கு பாதுகாப்பில்லை, குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லும் வகையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுபோல தப்பு செய்பவர்களுக்கு பொது வெளியில் தண்டனை கொடுக்க வேண்டும்.

ஆண் தன்னுடைய இச்சைக்காக அடுத்த உயிரை கொலை செய்கிற அளவிற்கு இருக்கும் போது அந்த ஆணுக்கு ஆண் உறுப்பு தேவையில்லை. அதை வெட்டி வீச வேண்டும் என்று மிகவும் ஆவேசமாக கூறியிருக்கிறார். மேலும் எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். ஒரு அம்மாவாக இது போன்ற செய்திகளை கேள்விப்படும் போது எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.

இது போன்ற ஒரு தண்டனை கொடுத்தால் மட்டும் தான் அது மற்றவர்களுக்கு ஒரு சரியான தீர்ப்பாக இருக்கும் என்றும் கஸ்தூரி மிகவும் கோபமாக பேசியிருப்பது தற்போது அனைவராலும் பாராட்டைப் பெற்று வருகிறது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

samantha nagarjuna
livingston daughter
actress manthra
malavika
madampatty rangaraj
samantha
To Top