Connect with us

திருமணமாகி ரெண்டே வருடத்தில் விவாகரத்து ஆன சோகம்.. நடிகை சுகன்யாவின் வாழ்க்கை பக்கங்கள்!..

suganya

Latest News

திருமணமாகி ரெண்டே வருடத்தில் விவாகரத்து ஆன சோகம்.. நடிகை சுகன்யாவின் வாழ்க்கை பக்கங்கள்!..

தமிழ் சினிமாவில் பாரதிராஜா மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமான ஒரு சில அறிமுக முகங்களில் நடிகை சுகன்யாவும் ஒருவர். பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் சுகன்யா.

சுகன்யாவிற்கு அதற்கு முன்பே கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை இழந்தார் சுகன்யா.

அதனை தொடர்ந்து சினிமாவில் முயற்சி செய்து வந்த பொழுது புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து சினிமாவில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றார் சுகன்யா.

புடவையில் நடித்த சுகன்யா:

அனைத்து விதமான கதைகளையும் தேர்ந்தெடுத்து அவர் நடித்திருக்கிறார். புடவை கட்டிக்கொண்டு பெரிதாக மாடர்ன் லுக்கில் இல்லாமல் தான் அதிகபட்சமான படங்கள் நடித்திருப்பார் சுகன்யா. இருந்தாலும் அதற்கும் வரவேற்பு இருக்கதான் செய்தது.

ஒரு சில திரைப்படங்களில் மட்டும் அவர் மார்டனாக நடித்திருப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுகன்யா.

ஆனால் திருமணம் ஆகி ஒரே வருடத்தில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு உண்டானது. இதனை தொடர்ந்து  2003 ஆம் ஆண்டு சுகன்யா விவாகரத்து வாங்கினார். பொதுவாகவே நடிகைகள் வாழ்க்கையில் விவாகரத்து என்பது சாதாரணமான விஷயம்.

விவாகரத்து பிரச்சனை:

விவாகரத்து செய்யாத நடிகைகள் தமிழ் சினிமாவில் அபூர்வமாக தான் இருந்து வருகிறார்கள். அதனால் அது அப்பொழுது பெரிய விஷயமாக தெரியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய விவாகரத்து குறித்து பேட்டியிள் பேசிய சுகன்யா கூறும் பொழுது பெண்கள் எதற்கும் பயந்து ஓட தேவை இல்லை.

கணவன் மனைவி இருவரும் கலந்து பேசி ஒரு புரிதலுடன் விவாகரத்து செய்யலாம். அப்படி இல்லை என்றால் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெறலாம். சமூகத்தில் 10 பேர் நம்மை பார்க்கிறார்கள் அவர்களுக்காக வாழ வேண்டும் என்றெல்லாம் மனசாட்சியோடு சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறுகிறார் சுகன்யா.

அப்படி விவாகரத்து பெற தயக்கமாக இருந்தால் கொடுமையான குடும்ப வாழ்க்கையை எதிர் கொள்ள வேண்டிய சூழல் இருக்கும். எனவே இவற்றையெல்லாம் கடந்து வர பெண்கள் பழக வேண்டும் என்று விவாகரத்துக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் சுகன்யா.

Latest News

tsr dharmaraj
vairamuthu ilayaraja
anirudh ilayaraja
To Top