Connect with us

சிறுவனுக்கு நேர்ந்த கதி.. அல்லு அர்ஜுனுக்கு விழுந்த அடுத்த பேரிடி..!

Tamil Cinema News

சிறுவனுக்கு நேர்ந்த கதி.. அல்லு அர்ஜுனுக்கு விழுந்த அடுத்த பேரிடி..!

Social Media Bar

சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா 2. இந்த திரைப்படத்தின் முதல் நாள் ரிலீஸ் அன்று அல்லு அர்ஜுன் செய்த செயலால் பெரும் அசம்பாவிதம் நடந்துள்ளது.

பொதுவாக சினிமா ரசிகர்கள் என்பவர்கள் பொறுப்பற்றவர்களாகதான் சமூகத்தின் பார்வையில் இருக்கின்றனர். இதனால்தான் படங்கள் முதல் நாள் ரிலீஸ் ஆகும்போது காவலுக்கு போலீஸ் வரை போடப்படுகிறது. இந்த நிலையில் ஒரு திரையரங்கில் புஷ்பா 2 வெளியானபோது அங்கு ரசிகர்களை பார்க்க சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்தார் அல்லு அர்ஜுன்.

திரையரங்கில் விபரீதம்:

pushpa 2

அப்போது கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். மற்றும் அவரது மகன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் இதற்காக அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

15 நாட்கள் காவலில் வைத்து அவரை விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால் கைது செய்யப்பட்ட 12 மணி நேரங்களுக்குள்ளாகவே சிறையில் இருந்து வெளிவந்தார் அல்லு அர்ஜுன்.

இந்த நிலையில் கவலைக்கிடமாக சேர்க்கப்பட்ட அந்த சிறுவனும் தற்சமயம் மூளை சாவு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் இது அல்லு அர்ஜுனை பாதிக்குமா? என ஒருப்பக்கம் கேள்விகள் எழுந்து வருகிறது..

To Top