ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீயின் மார்க்கெட் என்பது இந்திய அளவில் மிக பெரிய மார்க்கெட்டாக மாறிவிட்டது. தொடர்ந்து அட்லீயை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன.
இந்த நிலையில்தான் நடிகர் அல்லு அர்ஜுனை கதாநாயகனாக வைத்து அட்லீ தன்னுடைய அடுத்த திரைப்படத்தை துவங்கியிருக்கிறார். இந்த திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் ஒரு திரைப்படமாக இருக்கிறது.
ஹாலிவுட் நிறுவனங்கள்தான் இந்த படத்திற்கு கிராபிக்ஸ் வேலைகளை பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இப்பொழுது தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பதே பலரும் அறிந்த விஷயம்.

தீபிகா படுகோன் இல்லாமல் இன்னும் நான்கு நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் மிர்னல் தாகூர், ராஸ்மிகா மந்தனா, ஜான்வி கபூர் மற்றும் நடிகை பாக்கியஸ்ரீ போஸ் ஆகியோர் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கின்றனர்.
இது மட்டும் இல்லாமல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஹாலிவுட் நடிகர்களிடம் பேசி வருகிறாராம் அட்லி. ஏனெனில் இந்த திரைப்படத்தை ஹாலிவுட் அளவில் பிரபல படுத்த வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஹாலிவுட் பிரபல நடிகர் வீல்ஸ்மித்திடம் பேசி வருகிறாராம் அட்லி. இந்த திரைப்படத்தில் வில்லனாக வீல்ஸ்மித் நடித்தால் ஹாலிவுட் வரை இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்றாலும் கூட கண்டிப்பாக இந்த திரைப்படத்தின் பட்ஜெட் என்பது மிக அதிகமாகும்.
ஏனெனில் நடிகர் வில் ஸ்மித் அதிக சம்பளம் வாங்க கூடிய ஒரு நடிகர் ஆவார் எனவே இது எந்த வகையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபமாக இருக்கும் என்று தெரியவில்லை.