Cinema History
விஜயகாந்தை உயிரை கொடுத்து காப்பாற்றிய அருண் பாண்டியன்.. சிறப்பான சம்பவம் போல!.
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் மிக பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். நடிகர் விஜயகாந்த் ஒரே வருடத்தில் 18 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் அவருக்கு அதிக வரவேற்பு இருந்துள்ளது.
நடிகர் சங்க தலைவராக இருந்தப்போது கூட பலமுறை நடிகர்களுக்கும் நடிகர் சங்க ஊழியர்களுக்கும் உதவியுள்ளார் விஜயகாந்த். இந்த நிலையில் விஜயகாந்திற்க்கே உதவி தேவைப்படும் நிலையும் இவருக்கு ஏற்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் ஒருமுறை ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார் விஜயகாந்த். அந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பது அவருக்கு கடினமான காரியமாக இருந்துள்ளது. இந்த நிலையில்தான் அவருக்கு உதவி நடிகர் அருண் பாண்டியன் முன் வந்துள்ளார்.
அருண் பாண்டியனுக்கு தென் தமிழகத்தில் நல்ல செல்வாக்கு உண்டு. விஜயகாந்திற்கு பிரச்சனை என்பதை அறிந்த அருண்பாண்டியன் உடனே சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு விஜயகாந்தை அந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றினார்.
அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உண்டானது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கலாம் என திட்டமிட்டனர். அப்போதுதான் இணைந்த கைகள் என்கிற திரைப்படத்தில் நடிக்கவிருந்தார் அருண் பாண்டியன். அதில் இரண்டாவது கதாநாயகனாக விஜயகாந்தை நடிக்க வைக்க திட்டமிட்டார். ஆனால் அப்போது விஜயகாந்தால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
அதன் பிறகு தேவன் என்கிற திரைப்படத்தில் இவர் அருண் பாண்டியனோடு சேர்ந்து நடித்தார்.