Connect with us

நடிகைக்கு கன்னத்துலையே ஒன்னு வச்ச பாக்கியராஜ்!.. அடுத்த நாளே பாக்கியராஜை பழிவாங்கிய நடிகை.. முதல் படத்துலேயேவா?

bagyaraj

Cinema History

நடிகைக்கு கன்னத்துலையே ஒன்னு வச்ச பாக்கியராஜ்!.. அடுத்த நாளே பாக்கியராஜை பழிவாங்கிய நடிகை.. முதல் படத்துலேயேவா?

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து அதன் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் தனக்கான தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் பாக்கியராஜ். தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வரும்பொழுது நடிகராக வேண்டும் என்கிற ஆசையில்தான் வந்தார்.

ஆனால் எடுத்த உடனே அவருக்கு நடிகராக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதை அப்பொழுது பாக்யராஜ் அறிந்து கொண்டார். அதனை தொடர்ந்துதான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சென்று சேர்ந்தார் பாக்யராஜ்.

பாக்கியராஜ் திரைப்படம்:

பாரதிராஜா இயக்கிய முதல் திரைப்படமான 16 வயதினிலே திரைப்படம் முதலே அவரிடம் உதவி இயக்குனராக இருந்து வருகிறார் பாக்யராஜ். அதற்குப் பிறகு வெகு காலங்கள் கழித்துதான் சுவர் இல்லா சித்திரங்கள் என்கிற திரைப்படத்தை இயக்கினார் பாக்யராஜ்.

bhagyaraj
bhagyaraj

அந்த திரைப்படம் ஓரளவு வெற்றியும் பெற்றது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குனரான பாக்யராஜ் தொடர்ந்து அவரது திரைப்படங்களிலேயே அவர் நடிக்க தொடங்கினார். அவரது நடிப்புக்கும் அதிக வரவேற்பு கிடைத்தது.

பிறகு மற்ற இயக்குனர்களும் பாக்யராஜை வைத்து திரைப்படம் இயக்க துவங்கினார்கள். பெரும்பாலும் குடும்ப கதைகளைதான் பாக்கியராஜ் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இந்த நிலையில் முந்தானை முடிச்சு திரைப்படத்தில்தான் முதன்முதலாக அவர் நடிகை ஊர்வசியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.

நடிகையிடம் மோசம்:

முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஊர்வசிக்கு 15 வயதுதான் ஆகி இருந்தது. இருந்தாலும் அப்பொழுது அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த திரைப்பட அனுபவம் குறித்த ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் பாக்கியராஜ்.

அதில் அவர் கூறும்போது முந்தானை முடிச்சு திரைப்படம் ஊர்வசிக்கும் முதல் படம் என்பதால் அவர் மிகவும் பயத்தில் இருந்தார். அது அவரது முதல் படமாக இருந்ததால் ஒவ்வொரு நாளும் ஒரு காட்சியை ஐந்து முதல் ஆறு டேக் எடுக்க வேண்டி இருந்தது.

இதனால் அடிக்கடி நான் ஊர்வசியை திட்டி வந்தேன். பலமுறை அடித்தும் இருக்கிறேன். அதற்குப்பிறகு கண்ண திறக்கணும் சாமி என்கிற பாடல் படமாக்கப்பட்டபோது நான் பயத்தில் இருந்தேன். ஏனெனில் எனக்கு அவ்வளவாக நடனம் ஆடுவதற்கு வராது.

ஆனால் ஊர்வசி சிறப்பாக நடனமாட கூடியவராக இருந்தார். அதனால் அந்த பாட்டின் படப்பிடிப்பு நடந்து முடியும் வரையில் அவர் என்னை மிகவும் நக்கலாக நடத்தினார் பல இடங்களில் எனக்கு ஆடுவதற்கு அவர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் நடிகர் பாக்யராஜ்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

divya duraisamy 3
dhanush meena
sasikumar
ttf vasan zoya
To Top