Connect with us

ஷூட்டிங் ஸ்பாட்டில் பாட்டு கேப்பேன்? – இயக்குனரை காண்டாக்கிய பாரதி ராஜா!

Cinema History

ஷூட்டிங் ஸ்பாட்டில் பாட்டு கேப்பேன்? – இயக்குனரை காண்டாக்கிய பாரதி ராஜா!

Social Media Bar

தமிழின் மூத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாரதி ராஜா. இவர் இயக்கிய பல படங்கள் தமிழில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. ஆனால் வயதாகிவிட்டதால் தற்சமயம் எந்த படத்தையும் பாரதி ராஜா இயக்குவதில்லை.

ஆனால் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. இதை தொடர்ந்து வரிசையாக வாய்ப்புகளை பெற்று வருகிறார் பாரதி ராஜா.

தற்சமயம் அருள்நிதி நடிக்கும் திருக்குறள் என்கிற திரைப்படத்தில் பாரதி ராஜா நடித்து வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி காது கேட்காத வாய் பேச முடியாத நபராக நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பில் அருள்நிதி அழுவது போன்ற ஃபீலிங்கான காட்சி ஒன்று படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அனைவரும் அமைதியாக இருந்த அந்த தருணத்தில் எங்கிருந்தோ பாடல் சத்தம் கேட்டுள்ளது. கோபமான இயக்குனர் பாடல் வந்த திசையை நோக்கி செல்லும்போது அங்கே பாரதி ராஜா ஜாலியாக பாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பாடலை நிறுத்துமாறு கூறிய பிறகுதான் அங்கு படப்பிடிப்பு ஆரம்பமானது பாரதி ராஜாவிற்கு தெரிந்துள்ளது. இயக்குனர் பாரதி ராஜா என்றும் இளமையான மனநிலையை கொண்டவர் என்கிற பேச்சு சினி வட்டாரத்தில் உண்டு. அது எவ்வளவு உண்மை என்பது இந்த நிகழ்வின் மூலம் தெரிந்துள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top