Cinema History
ஏண்டா ஐயாக்கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்குறியா! – உதவி இயக்குனரை அடிக்க சென்ற தனுஷ்..!
தமிழ் சினிமாவில் ராஜ்கிரண் முக்கியமான நடிகராவார். ராஜ்கிரண் அவர் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நடிகர் வடிவேலுவை தமிழ் சினிமாவிற்கு ராஜ்கிரண்தான் அறிமுகப்படுத்தினார்.
இளமை காலங்களில் கதாநாயக நடித்தது மட்டுமின்றி தற்சமயம் துணை கதாபாத்திரத்திலும் கூட சிறப்பாக நடித்து வருகிறார் ராஜ்கிரண். சண்டைக்கோழி திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
பா.. பாண்டி என்கிற திரைப்படத்தை தனுஷ் இயக்கினார். அந்த படத்தில் ராஜ்கிரணுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராக பணிப்புரிந்தார். வேல்ராஜ் எப்போதும் மறுநாள் எந்தெந்த அறையில் படப்பிடிப்பு நடத்தப்பட போகிறதோ அங்கெல்லாம் முதல் நாளே லைட் வேலைகளை பார்த்துவிடுவார்.
இதனால் ஒரு ஷாட்டில் இருந்து அடுத்த ஷாட்டிற்கு போகும் நேரம் குறைவாகவே இருக்கும். ராஜ்கிரணுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டு. இந்த ஷாட் மாறும் நேரத்தில் அவர் புகைப்பிடிக்க செல்வார். ஆனால் அவர் சிகரெட்டை முழுதாக பிடித்து முடிப்பதற்குள் அடுத்த ஷாட் தயாராகிவிடும்.
உடனே பாதியிலேயே சிகரெட்டை கீழே போட்டுவிட்டு நடிக்க சென்றுவிடுவார். இப்படி ஒருமுறை உதவி இயக்குனர் ராஜ் கிரணை அழைத்தபோது வழக்கம்போல அவர் சிகரெட்டை அணைத்துவிட்டு நடிக்க தயாரானார். இந்த நிலையில் இந்த நிகழ்வை தனுஷ் பார்த்துவிட்டார்.
வேகமாக உதவி இயக்குனரிடம் வந்தவர். என்னய்யா நீ ஐயாக்கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்குற என அடிக்க வந்துவிட்டார். அந்த அளவிற்கு ராஜ்கிரண் மீது மரியாதையாக இருந்துள்ளார் தனுஷ்.