Connect with us

பிரச்சனை வந்ததும் தனுஷ் என்னை கோர்த்துவிட்டு எஸ்கேப் ஆயிட்டார்!.. மனம் திறந்த செல்வராகவன்!..

dhanush selvaragavan

Cinema History

பிரச்சனை வந்ததும் தனுஷ் என்னை கோர்த்துவிட்டு எஸ்கேப் ஆயிட்டார்!.. மனம் திறந்த செல்வராகவன்!..

Social Media Bar

செல்வராகவன் தமிழில் உள்ள சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர். காதல் கொண்டேன் என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். செல்வராகவனை பொறுத்தவரை சினிமாவில் அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு தனி ரசிகப்பட்டாளம் உண்டு.

மற்ற இயக்குனர்கள் இயக்கும் திரைப்படங்களில் இருந்து அவை தனியாக தெரியும் என கூறலாம். ஏனெனில் மாறுப்பட்ட திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குபவர் செல்வராகவன். அவரது திரைப்படமான 7ஜி ரெயின்போ காலணி, புது பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் இப்படி பல படங்கள் வித்தியாசமான கதையம்சத்தை கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

அதே போல இவர் தனுஷை வைத்து நிறைய படங்களை இயக்கியிருக்கிறார். தனுஷ் இவருடைய தம்பி என்பதால் சினிமாவில் அவரை வளர வைப்பதற்காக தொடர்ந்து அவரை வைத்து திரைப்படங்களை இயக்கி வந்தார் செல்வராகவன்.

selvaraghavan
selvaraghavan

இப்படியாக தனுஷை வைத்து அவர் திரைப்படம் இயக்கும்போது மயக்கம் என்ன என்கிற ஒரு திரைப்படத்தையும் இயக்கினார். பொதுவாகவே செல்வராகவன் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பவர்கள் சைக்கோ மாதிரியான கதாபாத்திரங்களாகதான் இருப்பார்கள்.

மயக்கம் என்ன திரைப்படத்தில் தனுஷின் கதாபாத்திரமும் அப்படிதான் இருக்கும். இந்த நிலையில் அப்போது அட்ரா அவள வெட்ரா அவள என்கிற பாடல் ஒன்று அந்த படத்தில் இருந்தது. ஆனால் அந்த பாடல் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

அதனை தொடர்ந்து அந்த பாடலை நீக்குமாறு பலரும் அறிவுறித்தினர். இந்த நிகழ்வை குறித்து பேட்டியில் கூறும் செல்வராகவன் கூறும்போது அந்த பாடலை எழுதியது தனுஷ்தான் ஆனால் அந்த பிரச்சனை வந்தப்போது என்னை வம்பில் சிக்கவிட்டு அவர் எஸ்கேப் ஆகிவிட்டார் என சிரித்துக்கொண்டே கூறியுள்ளார் செல்வராகவன்,

Articles

parle g
madampatty rangaraj
To Top