அஜித் ஒண்ணுமே செய்யாமல் எல்லாருக்கும் நல்லது செய்யக்கூடியவர்!. டாக்டருக்கு நடந்த நிகழ்வு!.. வெளிப்படுத்திய ஹெச்.வினோத்!.

தொடர்ந்து சினிமாவில் வெற்றி படங்களாகவே கொடுத்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். பொதுவாக நடிகர்கள் தங்கள் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்வதற்காக நிறைய விஷயங்களை செய்ய வேண்டி இருக்கும். பல பேட்டிகள், விருது வழங்கும் விழாக்களில் எல்லாம் கலந்துக்கொண்டு பேசினால்தான் அவர்களால் ட்ரெண்டில் இருக்க முடியும்.

ஆனால் இது எதையுமே செய்யாவிட்டாலும் கூட அஜித்திற்கான ரசிக பட்டாளம் இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் அஜித் நிஜ வாழ்க்கையில் பலருக்கும் செய்யும் உதவிகளே.

Social Media Bar

இதுக்குறித்து இயக்குனர் ஹெச்.வினோத்திடம் ஒரு பேட்டியில் கேட்கும்போது அவர் ஒரு கதை கூறினார். ஒரு இளைஞன் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவோடு சென்னைக்கு வருகிறான். அவனது கையில் 2000 ரூபாய்தான் பணம் இருக்கிறது.

மிகவும் பயத்துடன் அவன் வரும்போது அங்கு அஜித்தின் புகைப்படம் இருக்கிறது. எந்த பொருளாதார செல்வாக்கும் இல்லாமல் சினிமா பின்புலமும் இல்லாமல் அஜித்தால் இவ்வளவு பெரிய உயரத்தை தொட முடியும் என்றால் நம்மாளும் முடியும் என அவன் நினைக்கிறேன்.

எனவே அஜித் எதுவும் செய்ய தேவையில்லை. அவர் அவரது வேலையை செய்துக்கொண்டிருந்தாலே போதும். அதுவே பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்து நன்மை பயக்கிறது என்கிறார் ஹெச்.வினோத்.