Connect with us

படத்தை முடிச்சிட்டு பொத்திக்கிட்டு போயிடணும்!.. ரசிகரின் கேள்விக்கு லிங்குசாமி அளித்த பதில்!.

lingusamy

News

படத்தை முடிச்சிட்டு பொத்திக்கிட்டு போயிடணும்!.. ரசிகரின் கேள்விக்கு லிங்குசாமி அளித்த பதில்!.

Social Media Bar

தமிழில் ஒரு காலக்கட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லிங்குசாமி. ஆனந்தம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. அந்த திரைப்படம் முழுக்க முழுக்க இயக்குனர் விக்ரமன் பாணியில் இருந்தது.

அதற்கு பிறகு லிங்குசாமி இயக்கிய திரைப்படமான ரன், சண்டக்கோழி மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து லிங்குசாமி இயக்கிய மற்ற படங்கள் பெரிதாக போகவில்லை. அதிலும் அவர் மிக எதிர்பார்த்து வெளியிட்ட திரைப்படம் அஞ்சான்.

lingusamy-1
lingusamy-1

ஆனால் அந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் லிங்குசாமி ஒரு பேட்டியில் பேசும்போது அவரிடம் எடிட்டிங்கில் பலமுறை திரைப்படத்தை பார்க்கிறீர்கள் அப்படியும் கூட அதில் உள்ள தவறுகளை அப்படியே விட்டுவிடுகிறீர்களே என கேட்டிருந்தார் ரசிகர் ஒருவர்.

அதற்கு பதிலளித்த லிங்குசாமி நாங்கள் இயக்கும் படத்தில் உள்ள குறைகள் எங்களுக்கு தெரியாது. ஒரு விவசாயியின் வயலில் ரோஜா செடி இருந்தாலும் அது அவனுக்கு களை செடிதான் என்பது போல எங்கள் படத்தில் இருக்கும் காட்சிகள் எல்லாம் எங்களுக்கு நல்ல காட்சிகளாகவே தெரியும்.

இதனால்தான் வாரியர் திரைப்படத்தை இயக்கும்போது நான் ஒரு முடிவு செய்தேன். திரைப்படங்களை இயக்கிய பிறகு எடிட்டிங்கில் நாம் இருக்க கூடாது பொத்திக்கிட்டு வெளியே போயிடணும்னு என கூறியுள்ளார் லிங்குசாமி.

Articles

parle g
madampatty rangaraj
To Top