Connect with us

சூர்யா கார்த்தியை வச்சி அதிரிபுதிரியான படம் எடுக்க இருந்தேன்! – லோகேஷ் எடுக்க இருந்த திரைப்படம்!

Cinema History

சூர்யா கார்த்தியை வச்சி அதிரிபுதிரியான படம் எடுக்க இருந்தேன்! – லோகேஷ் எடுக்க இருந்த திரைப்படம்!

cinepettai.com cinepettai.com

தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுவரை நான்கு திரைப்படங்களே எடுத்திருந்தாலும் இயக்குனர்களில் தற்சமயம் பெரும் மார்க்கெட் உள்ள ஆளாக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.

அவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் அனைத்து படங்களுமே ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படங்கள். தற்சமயம் அவரது திரைப்படங்களில் சூர்யா கார்த்தி இருவருமே நடித்துவிட்டனர். ஆனால் இதற்கு முன்பே இவர்கள் இருவரையும் வைத்து தனி படம் செய்வதற்கு லோகேஷ் ஆசைப்பட்டாராம்.

லோகேஷ் மலையாளத்தில் மிகவும் ரசித்து பலமுறை பார்த்த திரைப்படம் ஐய்யப்பனும் கொசியும், இந்த படத்தில் பிஜு மேனன் போலீசாகவும், பிரித்திவிராஜ் இராணுவ அதிகாரியாகவும் இருப்பார். இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ சண்டையை வைத்து படத்தின் கதை செல்லும்.

இந்த படம் தெலுங்கிலும் ரானா டகுபதி மற்றும் பவண் கல்யாணை வைத்து படமாக்கப்பட்டது. இதே படத்தை தமிழில் இயக்கலாம் என லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டார். சூர்யாவை போலீஸ் கதாபாத்திரத்திலும், கார்த்தியை இராணுவ வீரன் கதாபாத்திரத்திலும் நடிக்க வைக்க திட்டமிட்டார்.

இதற்காக இவர்கள் இருவரிடமும் பேசி அனுமதியும் பெற்றுவிட்டார். ஆனால் அதற்குள் படம் எடுப்பதற்கான தமிழ் உரிமையை வேறு இயக்குனர் வாங்கிவிட்டார். அதனால் இதை லோகேஷ் கனகராஜால் படமாக்க முடியாமல் போயிற்று.

லோகேஷ் கனகராஜ் மட்டும் எடுத்திருந்தால் அய்யப்பனும் கொசியும் திரைப்படம் தமிழில் சிறப்பான படமாக வந்திருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

POPULAR POSTS

samyuktha
poonam bajwa
vijay GOAT
velpari shankar
kamalhaasan lingusamy
rajini ajith
To Top