Connect with us

விக்ரமையும் ஐஸ்வர்யாராயையும் வச்சி படம் எடுக்க சொன்னா தண்ணீல குதிச்சிருவேன்… மணிரத்தினம் அப்படி சொன்னதுக்கு இதுதான் காரணம்!..

maniratnam

Cinema History

விக்ரமையும் ஐஸ்வர்யாராயையும் வச்சி படம் எடுக்க சொன்னா தண்ணீல குதிச்சிருவேன்… மணிரத்தினம் அப்படி சொன்னதுக்கு இதுதான் காரணம்!..

Social Media Bar

director maniratnam : தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். மனிரத்தினத்தைப் பொறுத்தவரை அவரது திரைப்படத்தில் உள்ள வசனங்களும் ஒளிப்பதிவும் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படும்.

இதனாலேயே மணிரத்தினம் திரைப்படத்திற்கு ஆரம்ப காலகட்டம் முதலே வரவேற்பு இருந்து வந்தது. சொல்ல போனால் தமிழ் சினிமாவில் இவ்வளவு வருடங்களாக தொடர்ந்து தன்னை இயக்குனராகவே தக்க வைத்துக் கொண்டு தனக்கான மார்க்கெட்டும் குறையாமல் பார்த்துக் கொண்டவர் இயக்குனர் மணிரத்தினம் தான் என்று கூற வேண்டும்.

எப்போதும் பெரிய கதாநாயகர்களை வைத்து படம் எடுக்கும் பொழுது மணிரத்தினத்திற்கு அது கடினமான காரியமாகவே இருந்திருக்கிறது ஏனெனில் அவருக்கு பிடித்தார் போல அந்த நடிகர்கள் நடிக்க வைப்பதில் அவருக்கு பிரச்சனைகள் இருந்துள்ளன. அதனால்தான் கமல் ரஜினி மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து கூட ஒரு முறைதான் படம் எடுத்தார் மணிரத்தினம்.

இந்த நிலையில் இராவணன் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் நடிகர் கிருஷ்ணன் மணிரத்தினம் கேட்கும் பொழுது என்ன சார் பெரும் பட்ஜெட் கிடைத்திருக்கிறது. விக்ரம் ஐஸ்வர்யா ராய் போன்ற பெரும் நடிகர்களும் கிடைத்திருக்கிறார்கள் நீங்கள் இன்னமும் இந்த படத்தை சிறப்பாக எடுத்திருக்கலாமே என்று கேட்ட பொழுது மணிரத்தினம் ஒரு விஷயம் கூறியுள்ளார்.

இனி ஒரு முறை விக்ரம் ஐஸ்வர்யாராய் வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற ஒரு பெரிய தொகையை கொடுத்தால் அதை கடற்கரை ஓரத்திலேயே வைத்துவிட்டு தண்ணீரில் குதித்து விடுவேன் என்று கூறி இருக்கிறார் .ஏன் என்று கேட்கும் பொழுது பெரும் நடிகர்களை வைத்து எடுக்கும் பொழுது அதற்கான கற்பனைகளும் எனக்கு பெரிதாக உருவாகிறது.

எனவே அந்த நடிகர்களை வைத்து படம் எடுக்கும் பொழுது மிகவும் அது குறித்து யோசிக்கிறேன் அதுவே அந்த திரைப்படங்களுக்கு பிரச்சனையாகி விடுகிறது என்று கூறி இருக்கிறார் மணிரத்தினம் .ஆனால் அதே மணிரத்தினம் இன்னும் அதிக பெரிய ஹீரோக்களை வைத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சிறப்பாக இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Articles

parle g
madampatty rangaraj
To Top