Connect with us

அந்த படம் எனக்கு ரொம்ப முக்கியம்!.. ப்ளாக்கில் போய் எம்.ஜி.ஆர் பார்த்த படம்!.

mgr 1

Cinema History

அந்த படம் எனக்கு ரொம்ப முக்கியம்!.. ப்ளாக்கில் போய் எம்.ஜி.ஆர் பார்த்த படம்!.

cinepettai.com cinepettai.com

Actor MGR : தமிழ் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகர் எம்.ஜி.ஆர் திரை துறையைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் குறித்து பல்வேறு வகையான தகவல்கள் வலம் வருகின்றன.

சிலர் கூறும்பொழுது எம் ஜி ஆர் கொஞ்சம் தனித்துவமானவர் அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட மாட்டார் தனியாகதான் சாப்பிடுவார் என்றெல்லாம் கூறுவது உண்டு. சந்திரபாபு கூட தனது பேட்டிகளில் எம்.ஜி.ஆர் குறித்து அந்த மாதிரி தான் பேசி இருப்பார்.

ஆனால் எம்ஜிஆர் உடன் நெருங்கி பழகியவர்கள் கூறும் பொழுது எம்.ஜி.ஆர் அனைவருடனும் ஒரே மாதிரி பழகக் கூடியவர் மிகவும் சிம்பிளான ஒரு மனிதராக அவர் இருப்பார் என்று கூறியுள்ளனர். இப்படியான ஒரு சம்பவமும் ஒருமுறை நடந்துள்ளது 1950 களில் எம்.ஜி.ஆர் சர்வாதிகாரி என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ரா.வெங்கடசாமி என்னும் எழுத்தாளர் அவருடைய நெருங்கிய நண்பராக இருந்தார்.

mgr (1)
mgr (1)

அந்த சமயத்தில் சேலத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது அப்போது திரையில் வெளியாகிய ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டினார் எம்.ஜி.ஆர் ஒருநாள் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் அந்த திரைப்படத்திற்கு கண்டிப்பாக போய் ஆக வேண்டும் என்று ரா வெங்கடசாமியிடம் கூறினார் எம்ஜிஆர்.

அதனை அடுத்து வெங்கடசாமி தன்னுடைய நண்பர் ஒருவர் திரையரங்க உரிமையாளராக இருந்ததை அடுத்து அவரை சந்தித்து அவரிடம் குறிப்பிட்டு படத்திற்கு டிக்கெட் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் அந்த படத்திற்கு ஏற்கனவே அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை ஆகிவிட்டன என்று கூறிய திரையரங்க உரிமையாளர் இரு நாற்காலியை வேண்டுமானால் உங்கள் இருவருக்கும் தனியாக நான் போட்டு வைக்கிறேன்.

அதில் அமர்ந்து படத்தை பார்க்கிறீர்களா என கேட்ட பொழுது எம்ஜிஆர் உடனே அதற்கு ஒப்புக்கொண்டார் அவ்வளவு முக்கியமாக மக்களோடு மக்களாக அமர்ந்து எம்ஜிஆர் பார்க்க பார்க்க விரும்பும் அந்த திரைப்படம் என்ன என்று பார்க்கும் பொழுது அவருடைய மனைவி வி.என் ஜானகி நடித்த திரைப்படம்தான் அது என்பது பிறகு தான் தெரிந்தது.

அந்த சமயத்தில் அவர் ஜானகியை திருமணம் செய்திருக்கவில்லை காதலித்து வந்து கொண்டிருந்தார் எனவே அந்த படத்தை முக்கியமாக பார்க்க வேண்டும் என்று மக்களோடு மக்களாக இருந்து படத்தை பார்த்து விட்டு வந்துள்ளார் எம்ஜிஆர்.

POPULAR POSTS

virat kohli
taapsee
sathyaraj
itachi uchiha
kamalhaasan indian 2
poonam bajwa
To Top