Connect with us

அவ உயிரோட இருந்த வரைக்கும் யாராச்சும் கேட்டீங்களா!.. இப்ப வந்து பேசுவீங்க!.. பேட்டியில் கடுப்பான கங்கை அமரன்!..

bavatharani gangai amaran

News

அவ உயிரோட இருந்த வரைக்கும் யாராச்சும் கேட்டீங்களா!.. இப்ப வந்து பேசுவீங்க!.. பேட்டியில் கடுப்பான கங்கை அமரன்!..

Social Media Bar

Music Director Gangai Amaran: தமிழில் உள்ள திரையிசை கலைஞர்களில் முக்கியமானவர் இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன். ஆரம்பத்தில் பாடலாசிரியராக வேண்டும் என்பதுதான் கங்கை அமரனின் மிகப்பெரும் ஆசையாக இருந்தது.

இதற்காக பலமுறை கவிஞர் கண்ணதாசனிடம் வாய்ப்பு கேட்டு வந்தார் கங்கை அமரன். ஆனால் கண்ணதாசனிடம் வாய்ப்பு கிடைக்காததால் பிறகு சினிமாவில் இளையராஜாவுடன் சேர்ந்து இவரும் இசை அமைக்க துவங்கினார்.

இளையராஜா இசை அமைத்ததாக நினைக்கும் பல பாடல்கள் கங்கை அமரன் இசை அமைத்தவைதான் பிறகு தனியாகவும் கங்கை அமரன் இசையமைத்து கொடுத்தார். அதன் பிறகு திரைப்படங்களை இயக்கவும் துவங்கினார். கங்கை அமரனுக்கு இசையமைக்க தெரியும் என்றாலும் கூட அவர் இயக்கிய திரைப்படங்களுக்கு இளையராஜாவை தான் இசையமைக்க வைத்தார் கங்கை அமரன்.

gangai-amaren
gangai-amaren

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பலவித திறமைகளை கொண்ட ஒரு பிரபலமாக கங்கை அமரன் இருந்தார். தற்சமயம் ஒரு பேட்டியில் அவரிடம் இளையராஜாவின் மகளான பவதாரணி குறித்து பேசப்பட்டது. பவதாரணிக்கு தனிப்பட்ட குரல்வளம் உண்டு. பல பாடகிகள் பாடல் பாடினாலும் அதில் பவதாரணியின் குரலை தனியாக கண்டுபிடித்து விட முடியும்.

அப்படியான ஒரு தனிப்பட்ட குரலை கொண்டிருந்தாலும் கூட பவதாரணி ஏன் அதிகமான பாடல்களை பாடவில்லை என்று நிருபர் கங்கை அமரனிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த கங்கை அமரன் அவர் இறந்த பிறகு தானே அவர் குறளின் தனித்துவம் உங்களுக்கு தெரிகிறது.

உயிரோடு இருக்கும் பொழுது யாரும் அதைப்பற்றி பேசவில்லையே உயிரோடு இருக்கும் பொழுது அவருக்கு எந்த இசையமைப்பாளரும் வாய்ப்பு கொடுக்கவில்லை இறந்த பிறகு தானே உங்களுக்கெல்லாம் தெரிகிறது என்று கோபமாக பதில் அளித்து இருந்தார். ஒருவகையில் அது உண்மையும் கூட இளையராஜாவின் இசையமைப்பில் ஒரு சில பாடல்களில் பவதாரணி பாடினாரே தவிர வேறு எந்த இசையமைப்பாளரும் அப்போது பவதாரணிக்கு வாய்ப்புகள் கொடுக்கவில்லை. அதனால் தான் என்னவோ அவர் சினிமாவில் அதிக பாடல்கள் பாடவில்லை.

Articles

parle g
madampatty rangaraj
To Top