Cinema History
சிவாஜி நடிக்க வேண்டிய திரைப்படத்தில் நடித்த ஜெமினி! – சிவாஜி நடிச்சிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்..!
இந்திய சினிமாவில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் நடிகராக இருந்த சம காலத்தில் அவருக்கு இணையான இன்னொரு நடிகர் இந்திய சினிமாவிலேயே இல்லை என கூறப்படுகிறது.
அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பு திறமையை கொண்டவர் சிவாஜி. ஆனால் வயதான பிறகு தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்த காலக்கட்டத்தில்தான் அவ்வை சண்முகி திரைப்படத்தை இயக்கும் வேளையில் இருந்தார் கே.எஸ் ரவிக்குமார்.
அதில் மீனாவின் தந்தையாக சிவாஜி கணேசனை நடிக்க வைக்கலாம் என்பது கமல்ஹாசனின் திட்டமாக இருந்தது. எனவே இதுக்குறித்து கே.எஸ் ரவிக்குமாரிடம் பேசினார். கே.எஸ் ரவிக்குமாருக்கும் அந்த கதாபாத்திரம் சிவாஜிக்கு ஒத்துப்போகும் என தோன்றவே சிவாஜியிடம் இந்த விஷயத்தை கூறினார்.
ஆனால் அந்த சமயத்தில் சிவாஜிக்கு உடல் அவ்வளவாக நலமாக இல்லை. இருதய சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருந்தார் சிவாஜி. சிகிச்சைக்கு பிறகும் கூட அவரால் நடிக்க முடியுமா? என்பது சந்தேகமான விஷயமாகவே இருந்தது.
அப்படியும் கூட கமல்ஹாசனை அழைத்து கதையை கேட்டார் சிவாஜி. பிறகு “இந்த கதாபாத்திரத்திற்கு ஜெமினிதான் சரியான ஆள். அவனை வைத்து படத்தை எடு” என கூறியுள்ளார். பிறகு அவ்வை சண்முகியை காதலிக்கும் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஜெமினி கணேசன் நடித்தார்.