என்ன தமிழ் பற்றுனு வேஷம் போடுறீங்க.. விடாமுயற்சி இயக்குனர் குறித்து பிரபலம் சொன்ன விஷயம்.!

இதற்கு முன்பு பெரிதாக அடையாளம் தெரியாத இயக்குனராக இருந்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி. அவர் இயக்கிய கலக தலைவன், மீகாமன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் பேசப்படும் படங்களாக இருந்தாலும் கூட அவருக்கு அது தனித்துவமான அடையாளத்தை பெற்று தரவில்லை.

இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம்தான அவருக்கு அதிக பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 6 அன்று விடாமுயற்சி திரைக்கு வர இருக்கிறது.

வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் அதிகமாக காத்திருக்கும் ஒரு திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக மகிழ் திருமேனி நிறைய பேட்டிகள் அளித்து வருகிறார்.

Social Media Bar

இப்படியாக ஒரு பேட்டியில் அவர் கூறும்போது எனக்கு தமிழின் மீது பற்று அதிகம். ஒருவேளை நான் இயக்குனராகவில்லை என்றால் இலக்கியவாதி ஆகியிருப்பேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதை விமர்சித்து பேசியுள்ளார் பத்திரிக்கையாளர் பிஸ்மி. அவர் பேசும்போது தமிழ் பற்று அதிகம் உண்டு என கூறுகிறார் மகிழ் திருமேணி. ஆனால் அசர் பைஜானில் படப்பிடிப்பு நடந்தப்போது அவரது திரைப்படத்தில் தமிழர்களையே பெரிதாக வேலைக்கு வைக்கவில்லை.

ஆந்திராவை சேர்ந்தவர்களைதான் வேலைக்கு வைத்திருக்கிறார். அவ்வளவு தமிழ் பற்று உள்ளவர் என்றால் தமிழர்களுக்குதானே அவர் வேலை வழங்கியிருக்க வேண்டும் என கேட்டுள்ளார் பிஸ்மி.