Tamil Cinema News
சினிமாவுக்கு வரலைனா இதுதான் என் கனவு… அஜித்தை பின்பற்றும் கீர்த்தி பாண்டியன்.!
பிரபலங்களின் பிள்ளைகள் சினிமாவிற்குள் அடியெடுத்து வைப்பது என்பது தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் இருந்து இப்படியாக சினிமா பிரபலங்களின் குழந்தைகள் சினிமாவிற்குள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
அந்த வகையில் நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டார் தும்பா என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.
ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. அதனை தொடர்ந்து கீர்த்தி பாண்டியன் நடித்த ப்ளூ ஸ்டார், கண்ணகி மாதிரியான படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் சமீபத்தில்தான் கீர்த்தி பாண்டியனுக்கும் நடிகர் அசோக் செல்வனுக்கும் இடையே திருமணம் நடந்தது. சமீபத்தில் கீர்த்தி பாண்டியன் ஒரு பேட்டியில் கூறும் பொழுது ஒரு வேலை சினிமாவிற்கு வரவில்லை என்றால் கார் ரேஸ் பக்கம் தான் நான் சென்று இருப்பேன் என்று கூறியிருக்கிறார் கீர்த்தி பாண்டியன்.
நடிகர் அஜித்தை போலவே கீர்த்தி பாண்டியனுக்கும் கார் ரேஸ் மீது தான் அதிக ஈடுபாடு இருந்திருக்கிறது என்று இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
