Connect with us

கார்த்திக்கு நடந்த விபத்து!.. முன்பே யூகித்த இயக்குனர்!.. என்னன்னமோ சொல்றாரே!..

actor karthi

News

கார்த்திக்கு நடந்த விபத்து!.. முன்பே யூகித்த இயக்குனர்!.. என்னன்னமோ சொல்றாரே!..

Social Media Bar

 Karthi in paruthi veeran: பருத்திவீரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. சூர்யாவின் தம்பியான கார்த்தி அமெரிக்காவுக்கு சென்று படித்துவிட்டு இந்தியா திரும்பியவுடன் அவர் நடித்த படம் பருத்திவீரன்.

தனது பெரும் நடிப்பு திறனை காட்டி அந்த படத்தை பெரும் ஹிட் அடிக்க வைத்தார் கார்த்தி. அதற்கு பிறகு அந்த பருத்திவீரன் கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட ஒரு கதாபாத்திரமாக அவர் நடித்த திரைப்படம் பையா.

எவ்வளவுக்கு பருத்திவீரன் படத்தில் கிராமத்து ஆளாக இருந்தாரோ அவ்வளவுக்கும் பையா திரைப்படத்தில் மெட்ரோ சிட்டியை சேர்ந்த ஒரு நபராக இருந்தார். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கினார். இந்த படம் அனுபவம் குறித்து லிங்குசாமி ஒரு பேட்டியில் கூறும் பொழுது படத்தில் எடுக்க முயற்சித்து எடுக்கப்படாமல் போன ஒரு காட்சியை குறித்து கூறியிருந்தார்.

அந்த காட்சியில் கார்த்தி காலில் ஸ்கேட் போர்டு கட்டிக் கொண்டு சாகசம் செய்வது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட இருந்தது. அந்த காட்சி எடுக்கப்பட இருக்கும் பொழுது லிங்குசாமிக்கு மனது சரியில்லாதது போல் இருந்ததாம். ஏன் இப்படி இருக்கிறது என்று யோசித்த லிங்குசாமி சற்று நான் ஓய்வெடுத்து விட்டு வருகிறேன் என்று கூறி சென்றுள்ளார்.

திரும்ப அவர் வந்து பார்க்கும் பொழுது கார்த்திக்கு சாகசம் செய்வதற்காக கட்டியிருந்த கயிறு அறுந்த காரணத்தினால், அவர் கீழே விழுந்து அவரது கை எலும்பு உடைந்து விட்டது. இது குறித்து பேட்டியில் கூறிய லிங்குசாமி நடக்கும் விஷயங்களை நமக்கு ஏதோ ஒன்று முன்பே உணர்த்தி விடுகிறது நாம் தான் அதை அறியாமல் ரிஸ்க் எடுக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

To Top