இயக்குனர் அஸ்வின் குமார் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் மகாஅவதார் நரசிம்மா.
இந்த திரைப்படம் இப்பொழுது வரை திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக இந்தியாவில் அனிமேஷன் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இதுவரை இருந்தது கிடையாது.
அதனாலேயே பெரும்பாலும் இயக்குனர்கள் திரைப்படங்களை இயக்குவது கிடையாது. ஆனால் தெய்வீக திரைப்படம் என்பதால் அதிக வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம்.
அதே சமயம் அடுத்த பாகத்தில் விஷ்ணு பகவானின் அடுத்த ஒரு அவதாரத்தின் கதைகளம் படமாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.