தொடர்ந்து சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் திரைப்படமானது ஓரளவு உறுதியாகிவிட்டது என்றுதான் கூறவேண்டும். பொதுவாக வெற்றிமாறனை பொறுத்தவரை ஒரு திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்வார்.
அதே சமயம் அதற்கு ஒத்துழைத்து நடிகர்கள் நடிக்க வேண்டியது முக்கியமாக இருக்கும். சிம்பு கடந்த காலங்களில் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார் என்கிற ஒரு அவப்பெயரை பெற்றிருந்தார். எனவே மணிரத்தினம் சிம்புவை வைத்து மூன்று திரைப்படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார்.
எனவே அதற்கு பதில் அளித்த மணிரத்தினம் சிம்பு மிகவும் சின்சியரான ஒரு நடிகர். சிறப்பாக நடித்து கொடுக்கக் கூடியவர் என்று சிம்புவை குறித்து நல்ல விதமாக கூறியிருக்கிறார் மணிரத்தினம்.

இந்த மாதிரியான பெரிய இயக்குனர்கள் திரைப்படங்களில் சிம்பு ஒழுங்காக நடித்துக் கொடுத்துவிடுவார். ஆனால் மற்ற இயக்குனர்களுக்கும் அப்படியே நடித்து கொடுப்பாரா என்று ஒரு கேள்வி சினி வட்டாரத்தில் இருந்து வருகிறது.
ஆனால் மாநாடு திரைப்படத்திற்கு முன்பு சிம்பு படப்பிடிப்புகளுக்கு தாமதமாக தான் வந்து கொண்டிருந்தார். ஆனால் மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் சினிமாவின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
பத்து தல திரைப்படத்திற்கு கூட அந்த படத்திற்காக உடல் எடையை அதிகரித்து இருந்தார். அந்த அளவிற்கு சினிமாவின் மீது இப்பொழுது சிம்புவின் கவனம் அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.