News
ஈரத்துணியில் சொட்ட சொட்ட… அதை செய்றதுக்கு காரணமே அஜித் தான்.. உண்மையை கூறிய நடிகை மந்த்ரா..!
1990களில் நடிகை ரம்பா மாதிரி கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை மந்த்ரா. ஆரம்பத்திலேயே அவருக்கு பெரிய நடிகர்களின் படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது.
விஜய் அஜித் மாதிரியான பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் மந்த்ரா. ஆனால் அதற்குப் பிறகு புதுமுக நடிகைகளின் வருகை என்பது அதிகரிக்க துவங்கியது.
அதற்கு பிறகு மந்த்ராவிற்கும் வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இந்த நிலையில் சினிமாவில் வாய்ப்புகள் குறைத்து வந்த பிறகு தொடர்ந்து கவர்ச்சி பாடல்களிலும் நடிக்க துவங்கினார் மந்த்ரா.
அஜித் கொடுத்த வாய்ப்பு:
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் மந்த்ரா கூறும் பொழுது இப்பொழுது வரை சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் அப்பொழுது இருந்த அளவிற்கு பெரிய கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.
இருந்தாலும் வாய்ப்புகள் என்பது கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் ராஜா திரைப்படத்தில் ஒரு கவர்ச்சி பாடலில் இவர் ஆடி இருப்பார். அதில் உடல் முழுவதும் தண்ணீரில் ஈரம் சொட்ட சொட்ட மிகவும் கவர்ச்சியாக நடித்திருப்பார்.
அந்த பாடலில் ஆடுவதற்கு காரணம் என்ன என்று கேட்ட பொழுது அந்த பாடலை நான் அஜித்க்காக ஆடினேன். ஏற்கனவே அஜித்துக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தேன் இந்த பாடலிலும் நான் ஆட வேண்டும் என்று அஜித் கேட்டிருந்தார் எனவே நான் வந்து ஆடி கொடுத்திருந்தேன் என்று அதற்கு பதில் அளித்து இருந்தால் நடிகை மந்த்ரா.
