Connect with us

அவ்வளவு திமிரா போச்சா!.. என்.எஸ் கிருஷ்ணனை சுடுவதற்கு துப்பாக்கி வாங்கிய எம்.ஆர் ராதா!.. என்.எஸ் கிருஷ்ணன் பண்ணுனதுதான் சம்பவம்!.

ns krishnan mr radha

Cinema History

அவ்வளவு திமிரா போச்சா!.. என்.எஸ் கிருஷ்ணனை சுடுவதற்கு துப்பாக்கி வாங்கிய எம்.ஆர் ராதா!.. என்.எஸ் கிருஷ்ணன் பண்ணுனதுதான் சம்பவம்!.

Social Media Bar

தமிழில் பிரபலமான வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஆர் ராதா. திரைப்படங்களில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் கூட பலரும் அவரை வில்லனாகதான் பார்த்து வந்தனர். நாடகங்களில் இருந்து சினிமாவிற்கு வந்த பல திரைக்கலைஞர்களில் எம்.ஆர் ராதாவும் முக்கியமானவர்.

எம்.ஜி.ஆரை திரைத்துறையில் பெயர் சொல்லி அழைக்கும் ஒரு சில பிரபலங்களில் எம்.ஆர் ராதாவும் ஒருவர். ஆனால் அவருக்கு மூத்த கலைஞர்களை மரியாதையுடன் தான் நடத்துவார் எம்.ஆர் ராதா. அப்படிப்பட்ட எம்.ஆர் ராதா என்.எஸ் கிருஷ்ணனை கொலை செய்ய துப்பாக்கி வாங்கிய சம்பவமும் நடந்தது.

என்.எஸ் கிருஷ்ணன் அப்போது தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருந்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் எம்.ஆர் ராதா சினிமாவிற்கு வரவில்லை. மாறாக நாடகங்களில் விழிப்புணர்வு நாடகங்களாக எடுத்து வந்தார். இந்த நிலையில் அவரை ஒரு நாள் சந்தித்த என்.எஸ் கிருஷ்ணன் நான் சினிமாவில் இருக்கும் வரை நீ சினிமாவிற்கு வராதே என கூறினார்.

mr-radha-3
mr-radha-3

ஏன் என கேட்கும்போது இருவருமே பகுத்தறிவு கருத்துக்களைதான் பேசுகிறோம். அதனால் ஒருவருக்கு போட்டியாக இன்னொருவர் இருந்திட கூடாது என்றார் என்.எஸ் கிருஷ்ணன். அதனால் எம்.ஆர் ராதாவும் சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

ஆனால் இந்த நிலையில் எம்.ஆர் ராதாவின் நாடகம் ஒன்றை அவரிடம் கேட்காமல் படமாக்கினார் என்.எஸ் கிருஷ்ணன். இதனால் கடுப்பான எம்.ஆர் ராதா என்.எஸ் கிருஷ்ணனை சுடுவதற்கு ஒரு துப்பாக்கி வாங்கி வைத்திருப்பதாக பலரிடமும் கூறியிருக்கிறார்.

இதை கேள்விப்பட்டதும் நேராக எம்.ஆர் ராதாவை சந்தித்த என்.எஸ் கிருஷ்ணன் ஏதோ என்னை சுட துப்பாக்கி வாங்கி வச்சிருக்கியாம் எங்க சுடு என நின்றுள்ளார். பிறகு அவரை சமாதானப்படுத்தியுள்ளார் எம்.ஆர் ராதா. இந்த நிகழ்வை நடிகர் ராதா ரவி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top