தமிழில் தேசிய விருதை பெற்ற இரண்டு முக்கிய நடிகர்கள்.. இப்பவாச்சும் கொடுத்தாங்களே..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரும் நடிகர்களின் நடிப்புக்கு எப்போதுமே அதிக மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடுகிறது. அவர்கள் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் கூட அவர்களுக்கான வரவேற்பு என்பது குறைவது கிடையாது.

இந்த மாதிரி பெரிதாக நடிக்க தெரியாமல் அதே சமயம் பெரிய நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். ஆனால் அதே சமயம் துணை கதாபாத்திரங்களாக நடித்தாலும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

பெரிதாக துணை கதாபாத்திரமாக வருபவர்களை நாம் கண்டுக்கொள்ள மாட்டோம். ஆனால் தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தும்போது அவர்களும் கூட தனித்துவமாக தெரிய துவங்குவார்கள். அந்த வகையில் தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம் தெரிந்தவர்தான் நடிகர் எம்.எஸ் பாஸ்கர்.

Social Media Bar

துணை கதாபாத்திரமாக நடித்த இவருக்கு எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை விட அவர் நடித்த பார்க்கிங் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் பார்கிங் திரைப்படத்திற்காக சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளார் எம்.எஸ் பாஸ்கர்.

அதே மாதிரி பாக்கியராஜ் காலத்தில் இருந்தே நடித்து வருபவர் நடிகை ஊர்வசி. இவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கூடிய நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கு Ullozhukku என்கிற திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.