Connect with us

மாலை போட்டிருக்கேன்யா… ஆபாச பாட்டெல்லாம் பாட முடியாது..! – இளையராஜாவிடம் மல்லுக்கட்டிய பாக்கியராஜ்.

Cinema History

மாலை போட்டிருக்கேன்யா… ஆபாச பாட்டெல்லாம் பாட முடியாது..! – இளையராஜாவிடம் மல்லுக்கட்டிய பாக்கியராஜ்.

ராமராஜனின் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடிய அதே காலக்கட்டத்தில், குடும்பங்களால் கொண்டாடப்பட்ட மற்றொரு கதாநாயகனாக வலம் வந்தவர் பாக்கியராஜ். பாக்கியராஜின் படங்களுக்கு அந்த காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

அப்போது பாக்கியராஜ் அலுவலகத்திற்கு முன்னால் ஒரு கூட்டமே நிற்கும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் புகழ்ப்பெற்ற இயக்குனராக இருந்தவர் பாக்கியராஜ். பாக்கியராஜ் இயக்கிய பல படங்களுக்கு இளையராஜாதான் இசையமைப்பாளராக இருந்தார்.

முந்தானை முடிச்சி திரைப்படத்தில் ஒரு பாடலை இளையராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தார் பாக்கியராஜ். முந்தானை முடிச்சி திரைப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்து வந்தார். அந்த சமயத்தில் இளையராஜா சாமிக்கு மாலை போட்டிருந்தார்.

இளையராஜாவிடம் வந்த பாக்கியராஜ் விளக்கு வச்ச நேரத்திலே என்ற பாடலை பாட வேண்டும் என கேட்டுள்ளார். பாடல் வரிகளை பார்த்த இளையராஜா என்னய்யா இது ரொம்ப ஆபாசமா இருக்கு நான் இந்த பாட்டை பாட முடியாது. என கூறியுள்ளார்.

ஆனால் பாக்கியராஜ் விடுவதாக இல்லை. அதுனால என்ன சார் பாடி கொடுங்க என திரும்ப திரும்ப கேட்க சரி என்று இளையராஜாவும் பாட சம்மதித்தார். அப்போது அந்த பாடலை பாடும்போது விளக்கு வச்ச நேரத்துல தன்னானேனா என பாடிவிட்டார் இளையராஜா. அது நன்றாக இருப்பதாக தோன்றியது பாக்கியராஜ்க்கு.

உடனே இளையராஜா ஞாபக மறதியாக பாட்டை மாற்றி பாடி விட்டேன் என திரும்பவும் பாட சென்றுள்ளார். இதுவே நன்றாக கவர்ச்சியாகதான் உள்ளது இனி பாட வேண்டாம் என கூறியுள்ளார் பாக்கியராஜ். இந்த சம்பவத்தை அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

samantha nagarjuna
livingston daughter
actress manthra
malavika
madampatty rangaraj
samantha
To Top